ஐதராபாத் : திருப்பதிக்கு வருகை தந்த ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, ஏழுமலையான், திருச்சானூர் பத்மாவதி தாயார், அலிபிரி கபிலேஸ்வரர் கோவில்களில் சாமி தரிசனம் செயதார். அவருக்கு திருப்பதி-திருமலை தேவஸ்தானம் சார்பில் சிறப்பு வரவேற்பு அளிக்கப்பட்டது. தரிசனத்துக்கு பின் லட்டு, தீர்த்தம், பட்டு சால்வை, ஏழுமலையான் படம் ஆகியவை தேவஸ்தானம் சார்பில் பிரசாதமாக வழங்கப்பட்டது. முன்னதாக ஜனாதிபதியின் வருகையையொட்டி, மலைப்பாதையில் வாகனப்போக்குவரத்து நிறுத்தப்பட்டது.