பதிவு செய்த நாள்
03
ஜூலை
2015
10:07
செஞ்சி: லலிதா செல்வாம்பிகை கோவிலில், பவுர்ணமி மகா ஜோதி தரிசனமும், புஷ்பாஞ்சலியும் நடந்தது. விழுப்புரம் மாவட்டம், செஞ்சி தாலுகா, செல்லபிராட்டி லலிதா செல்வாம்பிகை கோவிலில், ஆனி மாத பவுர்ணமியை முன்னிட்டு, நேற்று முன்தினம் மாலை 6:00 மணி முதல், இரவு 9:00 மணி வரை, சிறப்பு ஹோமம் நடந்தது. தொடர்ந்து சித்தர் வழிபாடும், திருவிளக்கு பூஜையும், லலிதா செல்வாம்பிகைக்கு லலிதா சகஸ்ர நாமம், அஷ்டோத்தர நாமாவலி மற்றும் புஷ்பாஞ்சலியும் நடந்தது. நள்ளிரவு 12:00 மணிக்கு மகா ஜோதி தரிசனமும், தொடர்ந்து 16 வகை தீபாராதனையும் காண்பிக்கப்பட்டது. அறங்காவலர் கன்னியப்பன், மற்றும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். சிறப்பு பூஜைகளை, ஈஸ்வர சிவன் செய்திருந்தார்.