பதிவு செய்த நாள்
03
ஜூலை
2015
11:07
காரைக்கால் : காரைக்காலம்மையார் கோவில் மாங்கனி திருவிழாவில், இறைவனுக்கு அம்மையார் அமுதுபடைக்கும் வைபவம் நடந்தது. காரைக்கால் அம்மையாரின் வாழ்க்கை வரலாற்றை விவரிக்கும், மாங்கனி விழா, காரைக்கால் அம்மையார் கோவிலில் துவங்கி, நடந்து வருகிறது.கடந்த 29ம் தேதி மாப்பிள்ளை அழைப்பு, 30ம் தேதி பரமதத்தர், காரைக்காலம்மையார் திருக்கல்யாணம் நடந்தது.நேற்று முன்தினம், சிவபெருமான் அடியார் வேடத்தில் காவி உடை, ருத்ராட்சம் அணிந்து வீதி உலா நடந்தது. அப்போது, பக்தர்கள் அர்ச்சனை செய்த மாங்கனிகளை இறைத்தனர்.அதைத் தொடர்ந்து, வீதி உலா வந்த பிச்சாண்டவரை காரைக்காலம்மையார் எதிர் சென்று அழைத்து, இனிப்பு, பழங்கள் என பல்வேறு உணவுடன், இறைவனுக்கு அமுது படைக்கும் நிகழ்ச்சி நடந்தது.இரவு, புனிதவதியார் புஷ்ப பல்லக்கில் பாண்டிய நாடாகிய சித்தி விநாயகர் ஆலயத்திற்கு செல்லும் வைபவம் நடந்தது. இவ்விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.