பதிவு செய்த நாள்
03
ஜூலை
2015
11:07
காஞ்சிபுரம்: பிள்ளையார்பாளையம் பகுதியில் உள்ள, குரு கோவிலில், வரும் ஞாயிற்றுக்கிழமை, குரு பெயர்ச்சி விழா நடைபெற உள்ளது. காஞ்சிபுரம் காயாரோகணீஸ்வரர் கோவிலில், குருவிற்கு தனி சன்னிதி உள்ளது. இந்து அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ள இந்த கோவிலில், ஆண்டுதோறும் குரு பெயர்ச்சி விழா வெகுவிமரிசையாக நடைபெறும். இந்தாண்டு, வரும் ஞாயிற்றுக்கிழமை இரவு 11:2 மணியளவில், கடக ராசியில் இருந்து, சிம்ம ராசிக்கு குரு, இடப் பெயர்ச்சி அடைகிறார். இதை முன்னிட்டு, திங்கள்கிழமை, காலை 6:00 மணியளவில், மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், அதை தொடர்ந்து 12:00 மணியளவில் மூலவர் சந்தனக் காப்பு அலங்காரத்தில் அருள்பாலிப்பார்.