வெம்பக்கோட்டை: சிவகாசி அருகே ரிசர்வ்லைன் ஸ்ரீ சந்தன மாரியம்மன் கோயிலில் பால்குட திருவிழா நடந்தது. இதையொட்டி அம்மனுக்கு சிறப்பு அலங்காரங்கள், அபிஷேகம் நடந்தது. பெண்கள் பால்குடம் எடுத்து நேர்த்தி கடன் செலுத்தினர். அன்னதானத்தை அமைச்சர் ராஜேந்திரபாலாஜி தொடங்கி வைத்தார். அ. தி. மு.க., இலக்கிய அணி செயலாளர் பலராம், நகரச் செயலாளர் பொன் சக்திவேல், ஜெ., பேரவை செயலாளர் ரமணா, கவுன்சிலர் சீனிவாசன் கலந்து கொண்டனர்.