மயிலாடுதுறை: நாகை மாவட்டம் மயிலாடுதுறையில் தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான ஞானாம்பிகை சமேத வ தானேஸ்வரர்(வள்ளலார்) கோயில் உள்ளது. இந்த கோயில் குருபரிகார ஸ்தலமாக விளங்கி வருகிறது. இக்கோயிலில் குரு பெயர்ச்சியை முன்னிட்டு ஆண்டு தோறும் லட்சார்ச்சனை, சகஸ்ரநாம அர்ச்சனை, குருமகாயாகம் ஆகியவை நடைபெறும். அதேபோல் இவ்வாண்டு குருபெயர்ச்சியை முன்னிட்டு கட ந்த மே4ம் தேதி முதல் லட்சார்ச்சனை தொடங்கி நடைபெற்றது.நேற்று முன்தினம் இரவு 11.02 மணிய ளவில் குருபகவான் கடக ராசியிலிருந்து சிம்மராசிக்கு இடம் பெயர்ந்தார்.அதனை முன்னிட்டு வள்ள லார் கோயிலில் குருபகவானுக்கு சிறப்பு ஹோமங்கல், அபிஷேக, ஆராதனையுடன் தங்ககவச அலங் காரத்தில் குருபகவான் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில் தருமை ஆதீனம் 26வது குருமகா சன்னி தானம் ஸ்ரீலஸ்ரீ சண்முகதேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் கோயிலுக்கு எழுந்தருளி மேதா தட்சிணாமூர்த்தி சன்னதியில் சிறப்புவழிபாடு மேற்கொண்டு பக்தர்களுக்கு அருளாசிவழங்கினார்.மு ன்னதாக குருமகா சன்னிதானத்திற்கு பூர்ணகும்பமரியாதையுடன் வரவேற்பு அளிக்கப்பட்டது.இதில் திருஞானசம்பந்த தம்பிரான் சுவாமிகள், மீன் வளத்துறை அமைச்சர் ஜெயபால், கோயில் கண்காணிப் பாளர் நடராஜன், தலைமை அர்ச்சகர் சுப்ரமணியசிவாச்சாரியார் உட்பட பலர் கலந்துகொண்டனர்.