புதுச்சேரி : நாணமேடு சொர்ண பைரவர் கோவிலில் இன்று(8ம் தேதி) சிறப்பு அபிஷேகம் நடக்கிறது. புதுச்சேரி- கடலுார் சாலையில், இடையார்பாளையம் அடுத்த நாணமேடு கிராமத்தில் உள்ள சொர்ண பைரவர் கோவிலில், தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு, இன்று (8ம் தேதி) மாலை 4.௦௦ மணிக்கு பைரவருக்கு சிறப்பு ஆராதனை மற்றும் அபிஷேகம் நடக்கிறது.பூஜை ஏற்பாடுகளை முத்து குருக்கள் செய்து வருகிறார்.