Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news விழுப்புரம் ஷீரடி சாய்பாபா சிலைக்கு ... திருவள்ளூர் தட்சிணாமூர்த்திக்கு ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பத்ரகாளியம்மன் கோவில் திருவிழா: எருமைக் கிடாக்கள் பலியிட்டு நேர்த்திக்கடன்!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

10 ஜூலை
2015
10:07

மணப்பாறை:மணப்பாறை அருகேயுள்ள மட்டப்பாறைப்பட்டி பத்ரகாளியம்மன் கோவிலில், ஏழு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும், திருவிழா நேற்று நடந்தது. திருவிழாவில், எருமைக் கிடாக்கள் பலியிடப்பட்டது.திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே உள்ள மட்டப்பாறைப்பட்டியில், 500 ஆண்டுகள் பழைமை வாய்ந்த பத்ரகாளியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில், ஏழு ஆண்டுகளுக்கு ஒருமுறை, சுற்றுப்புறத்தில் உள்ள, 54 கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள், திருவிழா கொண்டாடுவர். இவ்விழாவில், வேண்டுதல் நிறைவேறியதற்காக, பக்தர்கள், அம்மனுக்கு பலியிட எருமை கிடாவை வழங்குவர்.கடந்த, 2009ம் ஆண்டு திருவிழா நடந்தது. ஏழு ஆண்டுகளுக்குப் பின், இந்த கோவில் திருவிழா கடந்த மாதம், 23ம் தேதி, காப்புகட்டுதலுடன் துவங்கியது. கடந்த, 7ம் தேதி கரகம்பாலித்தல் நிகழ்ச்சியும், நேற்று முன்தினம் பொங்கல் வைத்தல் நிகழ்ச்சியும் நடந்தது.

நேற்று மதியம், கருப்பசாமி பூசாரிகளால் பத்ரகாளியம்மனுக்கு எருமை கிடாக்கள் பலியிடும் நிகழ்ச்சி நடந்தது. வேண்டுதலை நிறைவேறிய பக்தர்கள், அம்மனுக்கு காப்புக்கட்டியதில் இருந்து, நேர்த்திக்கடனாக, எருமை கிடாக்களை கோவிலில் ஒப்படைத்தனர். பக்தர்கள் நேர்த்திக் கடனாக செலுத்திய எருமைகள், கோவில் அருகில் உள்ள பட்டியில் அடைக்கப்பட்டன. பக்தர்களால் வழங்கப்பட்ட, 1,000க்கும் மேற்பட்ட எருமை கிடாக்கள், நேற்று மதியம் பலியிடப்பட்டன. விழாவில் மணப்பாறை எம்.எல்.ஏ., சந்திரசேகர், முன்னாள் எம்.எல்.ஏ., சின்னச்சாமி, அ.தி.மு.க., ஒன்றிய செயலாளர் சேது, நகர செயலாளர் பவுன் ராமமூர்த்தி, மணப்பாறை மாரியம்மன் கோவில் அறங்காவலர் வீரமணி, ஹிந்து சமய அறநிலையத்துறை ஆய்வாளர் ஜெயா உட்பட பலர் கலந்து கொண்டனர்.எருமை கிடாக்கள் பலியிடுவதை, கேமராவிலோ, மொபைல் ஃபோனிலோ படம் எடுக்க, விழாக்குழுவினர் அனுமதிக்கவில்லை. விழாவில் திருச்சி, திண்டுக்கல், கரூர், நாமக்கல், சேலம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர். மணப்பாறை மற்றும் கரூரில் இருந்து, அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில், சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பொன்னேரி; புரட்டாசியை முன்னிட்டு, தடப்பெரும்பாக்கம் லட்சுமி நாராயண பெருமாளுக்கு திருக்கல்யாண ... மேலும்
 
temple news
பழநி; திண்டுக்கல் மாவட்டம் பழநி திருஆவினன்குடி குழந்தை வேலாயுதசுவாமி கோயில் அர்த்தமண்டபத்திற்கு ... மேலும்
 
temple news
வால்பாறை; கோவில்களில்  நடந்த சஷ்டி பூஜையில் பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர்.வால்பாறை சுப்பிரமணிய ... மேலும்
 
temple news
கமுதி; ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே முதல்நாடு கிராமத்தில் எல்லைப்பிடாரி அம்மன் பீடத்திற்கு 100 ... மேலும்
 
temple news
பல்லடம்; பல்லடம் அருகே, மழை வேண்டி நூதன வழிபாட்டில் ஈடுபட்ட கிராம மக்கள், தேசிங்கு ராஜா- பஞ்ச ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar