பதிவு செய்த நாள்
10
ஜூலை
2015
10:07
திருவள்ளூர்: திருவள்ளூர், தட்சிணாமூர்த்திக்கு, 108 லிட்டர் பாலில் அபிஷேகம் நடந்தது. திருவள்ளூர் அடுத்த, பூங்கா நகர், யோகஞான தட்சிணாமூர்த்தி கோவிலில், நேற்று காலை 10:00 மணிக்கு, குரு பகவானுக்கு, 108 லிட்டர் பாலில் அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து, மலர் அலங்காரம் செய்யப்பட்டு, சிறப்பு பூஜை நடந்தது. இதே போல், திருவள்ளூர் தீர்த்தீஸ்வரர் கோவில், சிவ - விஷ்ணு கோவில்களில் தட்சிணாமூர்த்திக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. இதில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு, சுவாமி தரிசனம் செய்தனர்.