Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news செங்குந்தர் மாரியம்மன் கோவிலில் ... சமயபுரம் மாரியம்மன் கோவில் உண்டியல் எண்ணிக்கை! சமயபுரம் மாரியம்மன் கோவில் உண்டியல் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மரத்தில் அம்மன் உருவம்: பக்தர்கள் கூடுவதால் பரவசம்!
எழுத்தின் அளவு:
மரத்தில் அம்மன் உருவம்: பக்தர்கள் கூடுவதால் பரவசம்!

பதிவு செய்த நாள்

11 ஜூலை
2015
11:07

அந்தியூர்: அந்தியூர் அடுத்த வேம்பத்தியில் உள்ள சொக்கநாச்சி அம்மன் கோவிலில், இரவு நேரத்தில் கோவில் எதிரில் உள்ள அரச மரத்தில் ஒளி வடிவில், அம்மன் காட்சி கொடுப்பதாக, கடந்த, நான்கு நாட்களாக அப்பகுதி மிகுந்த பரபரப்பாக உள்ளது. அந்தியூரில் இருந்து ஆப்பக்கூடல் செல்லும் மெயின் ரோட்டில், வேம்பத்தி பஸ் ஸ்டாப் அருகே, நூறாண்டு பழமையான சொக்கநாச்சி அம்மன் கோவில் உள்ளது. இங்கு, வெள்ளிக்கிழமை மற்றும் அமாவாசை தினத்தில், அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடக்கும். அந்தியூர், தவிட்டுப்பாளையம், பிரம்மதேசம், வெள்ளையம்பாளையம், பருவாச்சி, ஆப்பக்கூடல், சந்தியபாளையம் உட்பட பல்வேறு பகுதியில் இருந்து, ஏராளமான பக்தர்கள் வழிபட்டு செல்வர். இக்கோவிலுக்கு எதிரில் உள்ள அரச மரத்தில், அம்மன் ஒளி வடிவில் காட்சி தருவதாக கூறி, கடந்த, நான்கு நாட்களாக தினமும், நூற்றுக்கணக்கானோர், பல்வேறு பகுதியில் இருந்தும் வந்து, பார்த்தும், தரிசனம் செய்தும் செல்கின்றனர். இரவு, 7 மணிக்கு வரத்துவங்கும் கூட்டம், நள்ளிரவு, 12 மணி வரை நீடிக்கிறது. நேற்று முன்தினம் மாலை, 3 மணிக்கு கோவிலில், சிறப்பு யாக பூஜைகள் நடந்தது. பின், சொக்கநாச்சி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்து, அலங்கார தீபாராதனை நடந்தது. பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.ஆப்பக்கூடல் போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
ராமேஸ்வரம்; பங்குனி அமாவாசை யொட்டி ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் அக்னி தீர்த்த கடலில் ஏராளமான ... மேலும்
 
temple news
காரைக்குடி; காரைக்குடி மீனாட்சிபுரம் முத்துமாரியம்மன் கோயில் மாசி பங்குனி திருவிழாவை முன்னிட்டு ... மேலும்
 
temple news
பாலக்காடு; குருவாயூர் கிருஷ்ணர் கோவில் மேல்சாந்தியாக, நாராயணன் நம்பூதிரி தேர்வு ... மேலும்
 
temple news
கோவை ; பங்குனி மாதம் அமாவாசை திதியை முன்னிட்டு கோவை பேரூர் நொய்யல் ஆற்றங்கரையில் பொதுமக்கள் தங்கள் ... மேலும்
 
temple news
மைசூரு: கன்னட உகாதியை ஒட்டி, மைசூரு அரண்மனை வளாகத்தில், ‘உகாதி சங்கீத உத்சவம்’ வரும் 19 முதல். 21ம் தேதி வரை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar