Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஆதிபுத்திரகொண்ட அய்யனார் கோயிலில் ... கும்மிடிப்பூண்டியில் இன்று சோமவார பிரதோஷம்! கும்மிடிப்பூண்டியில் இன்று சோமவார ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சதுரகிரிமலைக்கு செல்ல பக்தர்களுக்கு சிறப்பு அனுமதி!
எழுத்தின் அளவு:
சதுரகிரிமலைக்கு செல்ல பக்தர்களுக்கு சிறப்பு அனுமதி!

பதிவு செய்த நாள்

13 ஜூலை
2015
10:07

வத்திராயிருப்பு: சதுரகிரி மலைக்கு செல்ல விதிக்கப்பட்ட தடை உத்தரவு தெரியாமல் நேற்று விடுமுறைநாள் என்பதால் ஏராளமான பக்தர்கள் மலையடிவாரத்தில் குவிந்தனர். மதுரை கலெக்டர் சுப்பிரமணியன் சிறப்பு அனுமதி வழங்கியதை தொடர்ந்து, அவர்கள் மலை கோயிலுக்கு சென்று தரிசனம் செய்தனர்.

விருதுநகர் மற்றும் மதுரை மாவட்டத்திற்கு உட்பட்ட சதுரகிரிமலையில் சுந்தர மகாலிங்க சுவாமி கோயில் உள்ளது. மே 17 ல் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு ஆயிரக்கணக்கான பக்தர்கள் சிக்கிக் கொண்டனர். வெள்ளத்தை கடக்க முயன்ற ஒன்பது பேர் நீரில் இழுத்துச் செல்லப்பட்டு உயிரிழந்தனர். இதன் தொடர்ச்சியாக இரு மாதங்களுக்கு மலைக்கு பக்தர்கள் செல்ல மதுரை கலெக்டர் சுப்பிரமணியன் தடை விதித்தார். அதேநேரத்தில் முக்கிய நிகழ்வான அமாவாசை, பவுர்ணமியையொட்டி மட்டும் தலா மூன்று நாட்கள் செல்ல அனுமதி வழங்கினார்.

இந்த தடை உத்தரவு அமலில் இருக்கும் விஷயம் தெரியாமல் பலபகுதிகளிலிருந்தும் பக்தர்கள் வந்தபடி உள்ளனர். நேற்று விடுமுறை தினம் என்பதால் காலையில் ஏராளமானோர் மலையடிவாரத்தில் குவிந்தனர். சென்னை, பெங்களூரு, புதுச்சேரி, காஞ்சிபுரம் என நீண்ட தொலைவிலிருந்து வந்திருப்பதால் தங்களை மலை கோயிலுக்கு செல்ல அனுமதிக்குமாறு வலியுறுத்தினர். வனத்துறையினர் மறுத்தனர். பக்தர்கள் எண்ணிக்கை கூடியதால் போலீசார் வரவழைக்கப்பட்டனர். அனுமதிகேட்டு பக்தர்கள் போலீசார், வனத்துறையினரோடு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இதை தொடர்ந்து மதுரை, விருதுநகர் மாவட்ட போலீசார் மதுரை கலெக்டர் சுப்பிரமணியனிடம் பேசி சிறப்பு அனுமதி பெற்று தந்தனர். இதன்பின் பக்தர்கள் காலை 11 மணிக்கு சுவாமி தரிசனத்திற்காக மலைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அனுமதி பெற சிலமணி நேரம் ஆனதால் காத்திருந்தவர்களின் பலர் ஏமாற்றத்துடன் ஊருக்கு புறப்பட்டனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருச்சி; பூலோக வைகுண்டம் என போற்றப்படும் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோயிலில் ஆண்டுதோறும் சித்திரை ... மேலும்
 
temple news
பழநி; பழநி முருகன் கோயிலில் பக்தர்கள் அதிகளவில் வருகை புரிந்தனர்.பழநி கோயிலில் கோடை விடுமுறை நாளை ... மேலும்
 
temple news
சாயல்குடி; அக்னி நட்சத்திரத்தின் தாக்கம் வருகிற மே 29 வரை நீடிக்கிறது. சுட்டரிக்கும் கத்திரி ... மேலும்
 
temple news
திருப்புத்தூர்; திருப்புத்தூர் பூமாயி அம்மன் கோயிலில் வசந்தப் பெருவிழாவை முன்னிட்டு பெண்கள் ... மேலும்
 
temple news
திருப்பதி;  திருமலையில் உள்ள நாதநீராஜனம் தலத்தில் உலக நன்மைக்காக  பெருமாளை வேண்டி இன்று காலை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar