பதிவு செய்த நாள்
13
ஜூலை
2015
10:07
கும்மிடிப்பூண்டி: பாலீஸ்வரர் மற்றும் வரமூர்த்தீஸ்வரர் கோவில்களில் இன்று, சோமவார பிரதோஷம் நடைபெற உள்ளது.
திங்கட்கிழமை சிவனுக்கு உகந்த நாள் என்பதால், திங்கட்கிழமைகளில் வரும் பிரதோஷம், சனி பிரதோஷத்திற்கு ஈடான சிறப்பை கொண்டது. இன்று சிவாலயங்களில், சோமவார பிரேதாஷ விழா நடைபெற உள்ளது. கும்மிடிப்பூண்டி அடுத்த, புதுகும்மிடிப்பூண்டியில் உள்ள, ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த, பார்வதி சமேத பாலீஸ்வரர் கோவிலில், இன்று மாலை 4:30 மணிக்கு, நந்தீஸ்வர் மற்றும் பாலீஸ்வரருக்கு, 108 லிட்டர் பால் அபிஷேகமும், அதை
தொடர்ந்து, மாலை 6:00 மணிக்கு, விஷேச தீபாராதனையும் நடைபெற உள்ளன.
கவரைப்பேட்டை அடுத்த அரியதுறையில், காசிக்கு சமமாக போற்றப்படும், மரகதவல்லி சமேத வரமூர்த்தீஸ்வரர் கோவிலில், இன்று மாலை 4:00 மணிக்கு, நந்திக்கும், மாலை 5:00 மணிக்கு, வரமூர்த்தீஸ்வரருக்கும், பாலாபிஷேகம் நடைபெற உள்ளது. தொடர்ந்து, மாலை 6:00 மணிக்கு, ரிஷப வாகனத்தில், சுவாமி உள்புறப்பாடு நடைபெற உள்ளது.