Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கோதண்டராமசுவாமி கோயிலில் ... முத்துமாரியம்மனுக்கு 700 கி.,மஞ்சள் அபிஷேகம்! முத்துமாரியம்மனுக்கு 700 கி.,மஞ்சள் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
வடிவீஸ்வரம் அழகம்மன் கோயில் வருஷாபிஷேகம்: கலையரங்கம் திறப்பு!
எழுத்தின் அளவு:
வடிவீஸ்வரம் அழகம்மன் கோயில் வருஷாபிஷேகம்: கலையரங்கம் திறப்பு!

பதிவு செய்த நாள்

17 ஜூலை
2015
11:07

நாகர்கோவில்: கன்னியாகுமரி மாவட்டம் வடிவீஸ்வரம் அழகம்மன் கோயில் வருஷாபிஷேகம் நேற்று 1008 சங்காபிஷேகத்துடன் நடந்தது. தினமலர் நிறுவனர் டி.வி.ராமசுப்பையர் (டி.வி.ஆர்.) நினைவாக கலையரங்கம் திறக்கப்பட்டது.வடிவீஸ்வரம் அழகம்மன் சுந்தரேஸ்வரர் கோயில் பழமையானது. இங்கு கடந்த ஆண்டு ஆனி மாதம் கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. கோயிலின் தெற்கு வாயிலில் ராஜகோபுரம் நிறுவப்பட்டு அதற்கும் கும்பாபிஷேகம் நடந்தது. இந்த ராஜகோபுரம் தினமலர் நாளிதழ் சார்பில் உபயமாக கட்டி கொடுக்கப்பட்டது.இதன் வருஷாபிஷேக விழா நேற்று அதிகாலை கணபதி ஹோமத்துடன் தொடங்கியது. தொடர்ந்து பல்வேறு ஹோமங்கள் நடந்தன. 1008 சங்காபிஷேகம் நடந்தது. சங்குகளில் புனித நீர் நிறைக்கப்பட்டு அது சிவபெருமானுக்கு அபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து அழகம்மனுக்கும், பரிவார மூர்த்திகளுக்கும் கலசாபிஷேகம் நடந்தது. அன்னதானம் வழங்கப்பட்டது.விழாக்குழு சார்பில் கலையரங்கம் கட்டப்பட்டு அதற்கு தினமலர் நாளிதழ் நிறுவனர் டி.வி. ராமசுப்பையர் பெயர் சூட்டப்பட்டது. திறப்பு விழா விழாக்குழு செயலாளர்கள் சீனு என்ற சீனிவாசன், நாகராஜன் தலைமையில் நடந்தது. தலைவர் ஐயாமணி அய்யர் கலையரங்கத்தை திறந்து வைத்தார். நாகர்கோவில் நகராட்சி தலைவி மீனாதேவ் குத்து விளக்கேற்றினார். பேராசிரியர் கிருஷ்ணமூர்த்தி, ராமசேஷன், மகாதேவன், சுப்பிரமணியம், பொருளாளர் சங்கர் பேசினார்கள். சிவதாணு நன்றி கூறினார்.விழாவில் பேசியவர்கள், வடிவீஸ்வரம் கிராமத்தில் பிறந்து, தினமலர் நாளிதழை தொடங்கி, குமரி மாவட்டம் தமிழகத்துடன் இணைய நடந்த போராட்டத்தை ஒருங்கிணைத்து சமூக தொண்டாற்றியவர் டி.வி.ராமசுப்பையர் என்று குறிப்பிட்டனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே பூம்புகாரில் காவிரி ஆறு, கடல் சங்கமிக்கும் சங்கமத்துறையில் ... மேலும்
 
temple news
சிதம்பரம்: சிதம்பரம் நடராஜர் கோவிலில் பொங்கல் கொண்டாட்டத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.சிதம்பரம் ... மேலும்
 
temple news
விருத்தாசலம்: விருத்தகிரீஸ்வரர் கோவில் மாசிமக தேரோட்டத்தை முன்னிட்டு தேர் கட்டும் பணி தீவிரம் ... மேலும்
 
temple news
நடுவீரப்பட்டு: நடுவீரப்பட்டு அடுத்த சி.என்.பாளையம் மலையாண்டவர் என்கிற ராஜராஜேஸ்வரி சமேத ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காணும் பொங்கலையொட்டி, காஞ்சிபுரத்தில் உள்ள பல்வேறு கோவில்களில் நேற்று பக்தர்கள் கூட்டம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar