கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி பத்ரகாளியம்மன் கோவிலில் நிகும்பலா யாகம் நடந்தது. கள்ளக்குறிச்சி பத்ரகாளியம்மன் கோவிலில், உலக அமைதி, நாட்டு நலன், தோஷ நிவர்த்தி வேண்டி, அமாவாசை நிகும்பலா யாகம் நடந்தது. பத்ரகாளியம்மன் மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு அபி÷ஷக, ஆராதனைகள் செய்யப்பட்டது. பெண் பக்தர்கள் குங்கும அர்ச்சனை செய்தனர். பெரியாண்டச்சி அம்மன், நாகாத்தம்மன், சக்தி அம்மன், காட் டேரி அம்மன் சாமிகளுக்கு மகா தீபாராதனை நடந்தது. தொடர்ந்து மிளகாய் வற்றல் யாகத்தின்போது, திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.