பிரத்தியங்கிராதேவி கோவிலில் அமாவாசை நிகும்பலா யாகம்!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
17ஜூலை 2015 11:07
கும்பகோணம்: அய்யாவாடி பிரத்தியங்கிராதேவி கோவிலில், அமாவாசையை முன்னிட்டு நடைபெற்ற நிகும்பலா யாகத்தில், பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர்.கும்பகோணம் அருகே உள்ள அய்யாவாடியில் பிரத்தியங்கிரா தேவி கோவில் உள்ளது. கோவிலில் அமாவாசை நாளில் நிகும்பலா யாகம் செய்து வழிபட்டால் சாப நிவர்த்தி, பில்லி, சூன்யம், கர்மவினை அகலுதல், வழக்குகளில் வெற்றி, இழந்த பதவியை மீண்டும் பெறுதல் போன்ற நற்பலன்கள் கிடைப்பதாக கூறப்படுகிறது.