Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
மகா உக்ரபிரத்யங்கிரா தேவி கோயிலில் ... ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சேலத்தில் மாரியம்மன் கோவில்களில் ஆடி பண்டிகை
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

17 ஜூலை
2015
11:07

சேலம்: சேலத்தில் மாரியம்மன் கோவில்களில் ஆடி பண்டிகை துவங்கி உள்ள நிலையில், அரசு பொருட்காட்சி நடத்தும் வகையில், அரங்குகள் அமைக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.சேலம் மாவட்டத்தில், மாரியம்மன் கோவில்களின் ஆடிப் பண்டிகை ஜூலை, மூன்றாவது வாரத்தில் துவங்கும். எட்டுப்பட்டி மாரியம்மன்களில் தலைவியாக விளங்கும் கோட்டை மாரியம்மன் கோவில் பண்டிகைக்கான பூச்சாட்டுதல் நாளிலேயே பிற கோவில்களிலும் பூச்சாட்டப்பட்டு, ஜூலை நான்காவது வாரம் முதல், ஆகஸ்ட் முதல் வாரம் வரை, சேலமே விழாக்கோலம் பூண்டு இருப்பது வழக்கம்.கடந்த பல ஆண்டுகளாக, ஆடிப் பண்டிகைக்கு பின்பே அரசு பொருட்காட்சி துவங்கியது. இதனால், ஆடிப் பண்டிகையை காண வரும் பக்தர்கள் ஏமாற்றம் அடைந்தனர். அது மட்டுமின்றி, அரசு பொருட்காட்சியின் வருவாயிலும் சரிவு ஏற்பட்டு வந்தது.இந்நிலையில், நடப்பாண்டில், சேலம் மாரியம்மன் கோவில்களின் ஆடிப் பண்டிகை ஜூலை, 21ல் பூச்சாட்டுதலுடன் துவங்குகிறது. பொங்கல், உருளுதண்டம் ஆகியவை, ஆக., 4, 5 ஆகிய நாளில் நடக்கிறது. இதில் முக்கிய நிகழ்ச்சியான, ஆக., 5 பொங்கல் நாளில் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில், உள்ளூர் விடுமுறை விடப்படுகிறது.ஆடிப் பண்டிகை நாளில் பொருட்காட்சியை செயல்பாட்டுக்கு கொண்டு வர, சேலம் செய்தி துறை அதிகாரிகள் தீவிர முயற்சி மேற் கொண்டு வருகின்றனர். ஜூலை, 26ல் பொருட்காட்சியை துவக்குவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் தீவிரமாக நடந்து வருகிறது. இதில், அரசின், 48 துறைகள், அதன் உட்பிரிவுகள் சார்பில், அரங்கம் அமைப்பதற்கான அனைத்து பணிகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.நடப்பாண்டு, அரசுப் பொருட்காட்சி, ஆடிப் பண்டிகை நாட்களில் துவங்குவதால், அதிக அளவில் வருவாய் அரசுக்கு கிடைக்கும் என்பதோடு, கூட்ட நெரிசல் ஏற்படும் என்பதால், பழைய பஸ் ஸ்டாண்டை சுற்றியுள்ள பகுதிகளில் போக்குவரத்தில் மாற்றம் செய்வது குறித்தும் போலீஸ் அதிகாரிகள், தீவிர ஆலோசனை மேற் கொண்டு வருகின்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பழநி; பழநி மகிஷாசுரமர்த்தினி கோவிலில் தைப்பூச பாதயாத்திரை பக்தர்கள் நலன் வேண்டி சிறப்பு யாகம் ... மேலும்
 
temple news
பரமக்குடி: பரமக்குடி எமனேஸ்வரம் வரதராஜ பெருமாள் கோயிலில் கூடாரவல்லி விழாவையொட்டி ஊஞ்சல் சேவையில் ... மேலும்
 
temple news
ஹிந்து மதத்தில், கடவுள்களுக்கு பல்வேறு விதமான வழிபாடுகள் நடைமுறையில் உள்ளன. அவற்றில் சில விசித்திரமான ... மேலும்
 
temple news
பெங்களூரை ஐ.டி., நிறுவனங்களின் தலைநகர் என்று கூறுவதுண்டு. இங்கு கப்பன் பூங்கா, லால்பாக் பூங்கா உட்பட, ... மேலும்
 
temple news
பழநி; பழநி முருகன் கோயில் உண்டியல் எண்ணிக்கை நேற்று நடைபெற்றது. அதில் ரூ.3.59 கோடி காணிக்கையாக கிடைத்தது. ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar