பழநி: பழநி பெரியநாயகியம்மன் கோயிலில் ஆடிவெள்ளி, லட்சார்ச்சனை விழாவை முன்னிட்டு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் அலங்காரம் செய்து நூறாயிரம் மலர் தூவி அர்ச்சனைகள் செய்யப்பட்டது. பழநி ஊர்க்கோயில் பெரியநாயகியம்மன் கோயிலில் ஜூலை 17 முதல் ஆகஸ்ட் 14 வரை தினசரி மாலை சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, நூறாயிரம் மலர்கள் தூவி, லட்சார்ச்சனை நடக்கிறது. ஆகஸ்ட் 11ல் ஆடி லட்சார்ச்சனை வேள்வி நடைபெறவுள்ளது. நேற்று முதல் காலை 7மணிக்கு பெரியநாயகியம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்து மகாதீபாரதனை நடந்தது. மாலை 6.30 மணிக்கு ஆபரணாதி அலங்காரம் செய்யப்பட்டு லட்சார்ச்சனை நடந்தது. அழகுநாச்சியம்மன்கோயில், வனதுர்க்கையம்மன்கோயில், மாரியம்மன் கோயிலில் காலை, மாலையில் சிறப்பு அபிஷேகம், பூஜைகள் நடந்தது. லட்சுமிபுரம் மகாலட்சுமி கோயிலில் அம்மன் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. புதுதாராபுரம்ரோடு ரெணகாளியம்மன், புதுநகர் ரயில்வேகேட் முத்துமாரியம்மன் கோயில் உள்ளிட்ட "கூல் பிரசாதம் வழங்கபட்டது.