Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news தேனி அம்மன் கோயில்களில் கூழ் ... மகா கும்பமேளாவில் வி.ஐ.பி.,க்களுக்கு ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சென்னிமலை முருகபெருமானுக்கு 751 குடம் பாலாபிஷேகம்!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

18 ஜூலை
2015
12:07

சென்னிமலை: சென்னிமலை மலை மீதுள்ள சுப்பிரமணிய ஸ்வாமிக்கு, 751 குடம் பாலாபிஷேக பெருவிழா வரும், 26ம் தேதி நடக்கிறது. சென்னிமலையில் புகழ்பெற்ற முருகன் கோவிலான சுப்பிரமணியர் சுவாமி கோவில், மலை மீது அமைந்துள்ளது. முருகப்பெருமான் திருப்புகழை தந்த அருணகிரி நாதருக்கு, படிகாசு நல்கியது, புண்ணாக்கு சித்தர், செங்கந்துறை பூசாரி, வேட்டுவபாளையம் பூசாரி போன்ற முனிவர்களுக்கு, திருக்கோல காட்சி தந்ததும், கந்தர் சஷ்டி கவசம் அரங்கேறியதும், 1,320 படிகள் வழியாக இரட்டை மாட்டு வண்டி மலையேறிய சிறப்பும் கொண்ட ஸ்தலமாகும். மலை மீதுள்ள சுப்பிரமணியருக்கு, ஆடி விசாக நட்சத்திரத்தில், சென்னிமலை கைத்தறி மற்றும் சாய சாலை உரிமையாளர்கள் சங்கம் சார்பில், பாலபிஷேக பெருவிழா நடத்தப்படும். வரும், 26ம் தேதி, 48வது ஆண்டாக, 751 குடம் பாலபிஷேக விழா நடக்கிறது. அன்று காலை, 5.45 மணிக்கு, 751 திருப்பாற் குடங்கள் உரிய சிறப்புடன், சென்னிமலை கைலாசநாதர் கோவிலில் இருந்து புறப்பட்டு, மேளா தாளத்துடன் திருவீதி வலம் வந்து, மலை கோவிலை அடையும். காலை, 10.30 மணிக்கு மலை மேல் சுப்பிரமணியருக்கு பாலபிஷேகம் நடக்கும். தொடர்ந்து சிறப்பு அலங்காரம், மகா தீபாராதனையும், மதியம், 12.30 மணிக்கு உற்சவ மூர்த்தி பிரகார உலாக்கட்சி நடக்கிறது. மதியம் பக்தர்கள் அனைவருக்கும், மலை மீது அன்னதானம் வழங்கப்படுகிறது. ஏற்பாடுகளை, கைத்தறி மற்றும் சாய சாலை உரிமையாளர்கள் சங்க தலைவர் முத்துசாமி, துணை தலைவர் ஈஸ்வர்மூர்த்தி, செயலாளர் ராமலிங்கன், பொருளாளர் சாமிநாதன், மேலாளர் காளிமுத்து ஆகியோர் செய்து வருகின்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருவண்ணாமலை; அருணாசலேஸ்வரர் கோவிலில்,  திருவூடல் உற்சவ நிறைவு விழாவை யொட்டி,  உண்ணாமுலையம்மன் சமேத ... மேலும்
 
temple news
பல்லடம்; பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, அய்யன் கோவிலில் குவிந்த பக்தர்கள், நீண்ட வரிசையில், ரோட்டில் ... மேலும்
 
temple news
புதுச்சேரி: முத்தியால்பேட்டை லட்சுமி ஹயக்ரீவர் கோவிலில் திருக்கல்யாண உற்சவம் நேற்று ... மேலும்
 
temple news
தொண்டாமுத்தூர்: கோவை ஈஷா யோகா மையத்தில், ஆதியோகி முன்பு, பல்வேறு கலை நிகழ்ச்சிகளுடன் மாட்டுப்பொங்கல் ... மேலும்
 
temple news
பாகூர்: பாகூர் மூலநாதர் சுவாமி கோவிலில் உள்ள 8 நந்தி பெருமான்களுக்கும், மாட்டுப் பொங்கலையொட்டி சிறப்பு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar