Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கோவில்களில் சுவாமி தரிசன கட்டணம்: ... 108 அம்மன் கோவில்களுக்கு ரூ.5,500 கட்டணத்தில் சுற்றுலா! 108 அம்மன் கோவில்களுக்கு ரூ.5,500 ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சபரிமலை சன்னிதானத்தின் தென்கிழக்கு மூலையில் புதிய பிரசாத மண்டபம்!
எழுத்தின் அளவு:
சபரிமலை சன்னிதானத்தின் தென்கிழக்கு மூலையில் புதிய பிரசாத மண்டபம்!

பதிவு செய்த நாள்

20 ஜூலை
2015
11:07

சபரிமலை: சபரிமலை சன்னிதானத்தின் தென்கிழக்கு மூலையில் புதிதாக பிரசாத பிளான்ட் அமைக்கவும், அன்னதான மண்டபத்தை தேவசம்போர்டு நேரடியாக கட்டவும் உயர்மட்ட கமிட்டி கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. சபரிமலை மாஸ்டர்பிளான் உயர்மட்ட கமிட்டி கூட்டம் நேற்று சன்னிதானத்தில் அதன் தலைவர் ஐ.ஏ.எஸ். அதிகாரி ஜெயக்குமார் தலைமையில் நடைபெற்றது. இதில் தேவசம்போர்டு உறுப்பினர்கள் சுபாஷ்வாசு, குமாரன், செயலாளர் ஜெயக்குமார் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர். இதில் கலந்து கொண்ட கேரள வாஸ்து நிபுணர் காணிபையூர் புதிய பணிகள் செய்வதற்கான இடங்களை தேர்வு செய்தார் .இதில் சன்னிதானத்தில் கோயில் சுற்றளவை முடிவு செய்து தென்கிழக்கு மூலையில், தற்போது வெள்ளை நிவேத்யம் தயாராகும் புதிதாக அரவணை மற்றும் அப்பம் தயாரிக்கும் பிரசாத பிளான்ட் அமைக்க முடிவு செய்யப்பட்டது. இங்கு பக்தர் ஒருவர் காணிக்கையாக வழங்கிய அரவணை தயாரிப்பு இயந்திரம் பொருத்தப்படுகிறது. மேலும் மாளிகைப்புறம் கோயிலுக்கு பின்புறம் தனியாரிடம் ஒப்படைக்கப்பட்டு, பணி நடைபெறாமல் உள்ள பிரசாத மண்டபத்தின் பணியை தேவசம்போர்டு நேரடியாக செய்ய முடிவு செய்யப்பட்டது.

ஸ்ரீகோயிலை சுற்றி 63 மீட்டர் சுற்றளவில் உள்ள கட்டிடங்கள் அனைத்தையும் இடித்து அப்புறப்படுத்தவும், மாளிகைப்புறம் கோயிலில் உள்ள மணிமண்டபத்தை மட்டும் அப்படியே வைத்து விட்டு அதில் புனரமைப்பு பணிகள் செய்யவும் முடிவு செய்யப்பட்டது. நடைதிறப்பு: சபரிமலை நடை கடந்த 16-ம் தேதி திறந்து ஆடி மாத பூஜைகள் நடைபெற்று வருகிறது. வரும் 22-ம் தேதி இரவு பத்து மணி வரை நடை திறந்திருக்கும். 22-ம் தேதி அதிகாலை 5.30 மணிக்கு நிறைபுத்தரிசி பூஜை நடைபெறுகிறது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மார்கழி பிரதோஷம் சிவ வழிபாட்டிற்கு உகந்த சிறந்த நாள். 2026ம் ஆண்டின் தொடக்கத்திலேயே பிரதோஷம் வருவது ... மேலும்
 
temple news
சென்னை: 2025 ம் ஆண்டு இனிதே நிறைவடைந்து 2026 ம் ஆண்டு பிறந்ததையொட்டி, மக்கள் உலகம் முழுவதும் புதிய ஆண்டை ... மேலும்
 
temple news
சிதம்பரம்: சிதம்பரம் நடராஜருக்கு, வெளிநாட்டு பக்தர், ரூ. 25லட்சம் மதிப்புள்ள நவரத்தின ஆபரணம் ... மேலும்
 
temple news
புதுச்சேரி; ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு மணக்குள விநாயகர் கோவிலில் ஏராளமான பக்தர்கள் தரிசனம் ... மேலும்
 
temple news
புதுச்சேரி; புத்தாண்டை முன்னிட்டு புதுச்சேரியை அடுத்த பஞ்சவடி பஞ்சமுக ஆஞ்சநேயர் கோவிலில் 36 அடி உயர ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar