Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஸ்ரீவி.,ஆண்டாள் கோயிலில் ஆடிப்பூர ... சபரிமலையில் நாளை நிறை புத்தரிசி பூஜை: ஆக., 16ல் மீண்டும் நடை திறப்பு! சபரிமலையில் நாளை நிறை புத்தரிசி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஆடி முளைக்கொட்டு திருவிழா: மீனாட்சி அம்மனுக்கு அலங்காரம்!
எழுத்தின் அளவு:
ஆடி முளைக்கொட்டு திருவிழா: மீனாட்சி அம்மனுக்கு அலங்காரம்!

பதிவு செய்த நாள்

21 ஜூலை
2015
10:07

மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோயில் ஆடி முளைக்கொட்டு திருவிழாவை முன்னிட்டு மீனாட்சி அம்மன் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருள்கிறார். ஆடிப்பட்டம் தேடி விதை என்ற ஆன்றோர் வாக்கின்படி ஆடியில் விதை விதைத்து நாற்று நட்டு விவசாயி பணிகளை மேற்கொள்வர். அவரவர் தங்கள் விளை நிலங்களில் அமோக விளைச்சல் வேண்டி முளைக்கட்டு வைத்து இறைவனை வழிபாடு செய்வர். மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலில் மீனாட்சி அம்மனுக்கு ஆடி முளைக்கொட்டு திருவிழா ஜூலை 28 வரை நடக்கிறது.

மீனாட்சி அம்மன் சிறப்பு அலங்காரத்தில் தங்கச்சப்பரத்தில் பஞ்ச மூர்த்திகளுடன் காலை, மாலை ஆடி வீதிகளில் வலம் வந்து அருள்பாலிப்பார்.சிறப்பு அலங்காரங்கள்: ஜூலை 24ல் தங்கச்சப்பரத்தில் காலை 9 மணிக்கும், கிளி வாகனத்தில் இரவு 7 மணிக்கும் ஆடி வீதியில் அம்மன் எழுந்தருள்வார். அன்று மாலை 4.30 மணிக்கு சுந்தர மூர்த்தி நாயனார் குருபூஜை நடக்கிறது. சுந்தரமூர்த்தி நாயனார், சேரமான் பெருமாள் நாயனார் முறையே வெள்ளி யானை, குதிரை வாகனங்களில் எழுந்தருளி ஆவணி மூல வீதிகளில் திருவீதி உலா வந்த பின், மாலை 6.30 மணிக்கு பழைய திருக்கல்யாண மண்டபத்தில் திருக்கயிலாயக்காட்சி நடைபெறும். ஜூலை 25ல் தங்கச்சப்பரத்தில் காலை 9 மணிக்கும், உபய புஷ்பப்பல்லக்கில் இரவு 7 மணிக்கும் மீனாட்சி அம்மன் எழுந்தருள்வார். அன்று இரவு புஷ்ப பல்லக்கில் மீனாட்சி அம்மன் ஆடி வீதி வலம் வந்த பின், உற்சவர் சன்னதியில் அம்மன் சுவாமி மாலை மாற்றும் வைபவம் நடைபெறும். ஜூலை 27 ல் தங்கச்சப்பரத்தில் காலை 9.34 மணிக்கு மேல் காலை 9.58 மணிக்குள் சிம்ம வாகனத்தில் சட்டத்தேர் சித்திரை வீதியில் நடக்கும். புஷ்ப விமானத்தில் இரவு 7 மணிக்கு மீனாட்சி அம்மன் ஆடி வீதியில் எழுந்தருள்வார். மீனாட்சி கோயில் நாயக்கர் மண்டபத்தில் இரவு சைத்தோபசாரம் நடைபெறும். ஜூலை 28 ல் பொற்றாமரைக்குளக்கரையில் தீர்த்தவாரியுடன் ஆடி முளைக்கொட்டு விழா நிறைவு பெறுகிறது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
அசுரனுடன் போரிட்டு அவனை ஆட்கொண்டார். அவனை இருகூறாகப் பிளந்தவர் சேவலாகவும், மயிலாகவும் மாற்றி தன்னுடன் ... மேலும்
 
temple news
தூத்துக்குடி; திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் கந்த சஷ்டி திருவிழா யாகசாலை பூஜைகளுடன் ... மேலும்
 
temple news
மூங்கில்துறைப்பட்டு; மூங்கில்துறைப்பட்டு அருகே உள்ளமேல் சிறுவலூரில் உள்ள காளியம்மனுக்கு மிளகாய் யாக ... மேலும்
 
temple news
நெகமம்; கோவை, கிணத்துக்கடவு வடசித்துார் கிராமத்தில் மயிலந்தீபாவளியை மக்கள் கோலாகலமாக ... மேலும்
 
temple news
செஞ்சி; செஞ்சி மாரியம்மன் கோவிலில் பெண்கள் கேதார கவுரி நோன்பு எடுத்து அம்மனை வழிபட்டனர். ஒவ்வொரு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar