Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஆதிரெத்தினேஸ்வரர் கோயிலில் ... பத்ரகாளியம்மன் கோவிலில் அடி செவ்வாய் வழிபாடு! பத்ரகாளியம்மன் கோவிலில் அடி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
நீலகிரியில் ஹிரோடைய்யா திருவிழா: கோலாகலத்தில் படுகர் கிராமங்கள்!
எழுத்தின் அளவு:
நீலகிரியில் ஹிரோடைய்யா திருவிழா: கோலாகலத்தில் படுகர் கிராமங்கள்!

பதிவு செய்த நாள்

21 ஜூலை
2015
11:07

கோத்தகிரி: நீலகிரி மாவட்டத்தில் படுகரின மக்கள் வசிக்கும் கிராமங்களில்,ஹிரோடைய்யா திருவிழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது.நீலகிரி மாவட்டத்தில் வாழும் படுகரின மக்களின் குல தெய்வமான ஹிரோடைய்யா திருவிழா, மாவட்டத்தில் உள்ள பல கிராமங்களில் நேற்று நடந்தது.இந்த விழாவுக்காக, நேற்று முன்தினம் முழுவதும், அந்தந்த கிராமங்களில் உள்ள கோவிலில், பக்தர்கள் விரதம் இருந்து, நேற்று காலை, கோவிலில் இருந்து சங்கொலி எழுப்பி, கிராமத்தில் இருந்து சற்று தொலைவில் உள்ள பனகுடி எனப்படும் வனக்கோவிலுக்கு ஊர்வலமாக வந்தனர்.ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே, நடை திறக்கப்படும் இகோவிலில், கல்லில் பிரம்பை உரசி, அதில் இருந்து வெளியேறும் தீப்பொறியை கொண்டு, நெய்தீபம் ஏற்றப்பட்டது.மேலும், முதல் கன்றுக்குட்டி ஈனும் பசுவின் பால்; வனப்பகுதியில் இருந்து சேகரித்த கொம்புதேன் ஆகியவற்றை கொண்டு, ஐயனுக்கு அபிஷேக பூஜை நடத்தப்பட்டது. ஆண்களுக்கு மட்டுமே, வனக்கோவில் வளாகத்திற்குள் செல்ல அனுமதிக்கப்பட்டனர். பெண்களுக்கு அனுமதி இல்லை. தொடர்ந்து, கிராமங்களில் உள்ள அனைவரும் கலாச்சார உடையுடன், காணிக்கை செலுத்தி வழிப்பட்டனர். பின்பு, வனக்கோவிலில் இருந்து பக்தர்கள் ஊர்வலமாக சங்கொலி எழுப்பி, கிராமத்தில் உள்ள கோவிலை அடைந்தனர். குறிப்பாக, தொதநாடு சீமையை தலைமையிடமாக கொண்ட, கடநாடு கிராம ஹிரோடைய்யா கோவிலில், சிறப்பு வழிப்பாடுகள்; பூஜைகள் நடந்தன. இதேபோல, ஒன்னதலை, கம்பட்டி, பனஹட்டி, டி. மணியட்டி மற்றும் கக்குச்சி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களிலும் இவ்விழா கோலாகலமாக நடந்தது.

தானியத் திருவிழா: ஹிரோடைய்யா திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக, இன்று ஹரிக்கட்டுதல் என்ற தானிய விழா நடக்கிறது.கோவில் கல்துாணில், எள்தீபம் ஏற்றப்பட்டு, அருகில் உள்ள அக்கபக்க கோவிலில், வனப்பகுதியில் இருந்து சேகரித்துவரப்பட்ட, மூங்கில் தழையில், பலவகை தானியங்களை கோர்த்து, கட்டப்படுகிறது. இவ்வாறு கட்டுவதால், ஆண்டு முழுவதும் உணவுப்பஞ்சம் இருக்காது என, நம்பப்படுகிறது. இவ்விழாவின் ஒரு கட்டமாக, பொரங்காடு சீமைக்கு (கோத்தகிரி பகுதி) உட்பட்ட தாந்தநாடு தொட்டூரில், மண்டைதண்டு என்ற பாரம்பரிய விழா நடக்கிறது. இவ்விழாவில், வெளியூரில் இருந்து தாந்தநாடு தொட்டூருக்கு திருமணமாகி, முதல் ஆண் குழந்தை பெற்றெடுக்கும் பெண்கள், குழந்தைகளுடன், பழங்கால ஆபரணங்கள் அணிந்து, கலாச்சார உடையில் கோவிலை சுற்றி ஊர்வலமாக வரும் புனிதமான நிகழ்ச்சி நடக்கிறது. இத்திருவிழாவை முன்னிட்டு, படுக சமுதாய மக்கள் வசிக்கும், கிராமங்கள் விழா கோலம் பூண்டுள்ளன.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
அயோத்தி: அயோத்தி ராமர் கோவிலில் பிரதிஷ்டை தின இரண்டாம் ஆண்டு விழா மற்றும் துவாதசி உற்சவத்தை ... மேலும்
 
temple news
திருப்பதி; திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வைகுண்ட துவாதசியையொட்டி இன்று காலை திருமலையில் ... மேலும்
 
temple news
ஸ்ரீரங்கம்:  பூலோக வைகுண்டம் என்று அழைக்கப்படும், ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில், 108 திவ்ய தேசங்களில் ... மேலும்
 
temple news
ஒட்டன்சத்திரம்; பழநிக்கு பாதயாத்திரை செல்லும் பக்தர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து ... மேலும்
 
temple news
ஆர்.கே.பேட்டை: கிருத்திகையை ஒட்டி நேற்று, முருகர் மலைக்கோவில்களில் திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar