Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருவாலங்காடு காளியம்மன் கோவிலில் 108 ... கோவில்களில் சோலார் மின் உற்பத்தி ஆகமத்திற்கு புறம்பானதா? கோவில்களில் சோலார் மின் உற்பத்தி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பழநி மலைக்கோயில் மூலவருக்கு அபிஷேகத் தண்ணீர் குறைப்பா!
எழுத்தின் அளவு:
பழநி மலைக்கோயில் மூலவருக்கு அபிஷேகத் தண்ணீர் குறைப்பா!

பதிவு செய்த நாள்

22 ஜூலை
2015
10:07

பழநி: பழநி மலைக்கோயில் மூலவருக்கு காலபூஜைக்கான திருமஞ்சன அபிஷேக குடங்களின் எண்ணிக்கை குறைக்கப்பட்டுள்ளதாக புகார் எழுந்துள்ளது. பழநி மலைக்கோயில் ஞானதண்டாயுதபாணிசுவாமிக்கு நாள் தோறும் ஆறுகாலபூஜையின் போது 64 மிராஸ் பண்டாரங்கள் மூலம் வரட்டாற்றில் இருந்து குடங்களில் தண்ணீர் எடுத்து மூலவருக்கு திருமஞ்சன அபிஷேகம் செய்யப்படுகிறது. ஒருபூஜைக்கு 3 முதல் 5 குடங்கள் அபிஷேகம் செய்யப்படும். இந்நிலையில் ஒருகால பூஜைக்கு 2 குடங்கள் மட்டுமே ஊற்றப்படுவதாக புகார் எழுந்துள்ளது. நவபாஷாணங்களால் செய்யப்பட்ட மூலவருக்கு நல்லஎண்ணெய் சாத்தி, ஆகமவிதிப்படி திருமஞ்சன அபிஷேகம் செய்யவேண்டும், அதில் மாற்றம் செய்யக்கூடாது என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்துமக்கள் கட்சி மாவட்ட அமைப்பாளர் சிவக்குமார் கூறியதாவது: ""பழநி மலைக்கோயில் காலபூஜையில் திருமஞ்சன அபிஷேக குடங்களின் எண்ணிக்கையை குறைத்துள்ளதாக புகார் வருகிறது. 1984ல் ஓய்வு பெற்ற நீதிபதி சதாசிவம் கமிட்டி சிலைபாதுகாப்பிற்காக 7 விதிகளை விதித்துள்ளது. அதில் நைவேத்யம் தொன்னை போன்ற அளவில் தான் இருக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது. அபிஷேகத்திற்கு தடைஇல்லை. நவபாஷாணங்களால் ஆனது என்பதால் வெப்பம் அதிகம். ஆகையால் திருமஞ்சன தண்ணீர் குடங்களின் எண்ணிக்கையை எக் காலத்திலும் குறைக்க கூடாது. உள்ளே நீராவித் தொட்டியில் எப்போதும் தண்ணீர் நிறைந்திருக்க வேண்டும். ஆகமவிதிகள் படி பூஜை நடக்க வேண்டும்,என்றார்.கோயில் அதிகாரி ஒருவர் கூறுகையில்,"" மூலவருக்கு திருமஞ்சன அபிஷேகம் வழக்கம்போல் நடக்கிறது. இதில் எந்த விதமான மாற்றமும் இல்லை. சிலர் வேண்டும் என்றே தவறான வதந்திகளை பரப்புகின்றனர்,என்றார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மானாமதுரை; சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் மழை வேண்டி எல்லை தெய்வத்திற்கு கறிச்சோறு மற்றும் அசைவ ... மேலும்
 
temple news
கர்நாடக மாநிலம், தார்வாட்டில் சிருங்கேரி ஜகத்குரு சங்கராச்சாரியார் ஸ்ரீ ஸ்ரீ விதுசேகர பாரதி ... மேலும்
 
temple news
உத்தரகோசமங்கை; உத்தரகோசமங்கை மங்களநாதர் சமேத மங்களேஸ்வரி அம்மன் கோயில் பழமையும் பிரதான சிறப்பும் ... மேலும்
 
temple news
பழநி; பழநி முருகன் கோயிலில் கந்த சஷ்டி விழா அக்.,22ல் துவங்கி அக்.,27 சூரசம்ஹாரம், அக்.,28ல் திருக்கல்யாண ... மேலும்
 
temple news
அருப்புக்கோட்டை; அருப்புக்கோட்டை ரயில்வே ஸ்டேஷன் செல்வ விநாயகர் கோயிலில் ஸ்ரீதேவி, பூதேவி, சீனிவாச ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar