Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஷீரடி சாய் அன்னதானபாபா கோவிலில் 108 ... அன்னுார் கருப்பராயன் கோவில் 29ல் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருமூர்த்தி மலையில் ஆடித்திருவிழா : ஏற்பாடுகள் தீவிரம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

22 ஜூலை
2015
12:07

உடுமலை: உடுமலை திருமூர்த்திமலையில், மாவட்ட நிர்வாகம் சார்பில், ஆடிப்பெருந்திருவிழா நடத்த, ஏற்பாடுகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. உடுமலை திருமூர்த்திமலை அமணலிங்கேஸ்வரர் கோவிலில், ஆடிப்பெருக்கு விழா பிரசித்தி பெற்றதாகும். இந்த விழாவையொட்டி, சுற்றுலாவை மேம்படுத்தும் வகையில், கடந்த இரண்டு ஆண்டுகளாக திருப்பூர் மாவட்ட நிர்வாகம், சுற்றுலா துறை உட்பட அரசுத்துறைகளுடன் இணைந்து, ஆடிப்பெருந்திருவிழாவை நடத்தியது.இந்தாண்டு, விழா, வரும் ஆக., 2, 3 ஆகிய தேதிகளில் நடக்கிறது. விழாவையொட்டி, பல்வேறு பள்ளிகளின் கலை நிகழ்ச்சிகள் நடக்கிறது. இதற்காக, உடுமலை பகுதியிலுள்ள பள்ளிகள் மற்றும் கல்லுாரிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. அனைத்து அரசு துறைகள் சார்பிலும், விழா நடக்கும் பகுதியில், கண்காட்சி அரங்குகள் அமைக்கப்பட உள்ளன. இதற்காக முதற்கட்ட ஆலோசனை திருப்பூரில், நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. நேற்று, விழா நடத்த தேர்வு செய்யப்பட்டுள்ள இடத்தை, கோட்டாட்சியர் சாதனைக்குறள், தாசில்தார் சைபூதீன் ஆய்வு செய்தனர். திருமூர்த்தி அணை படகுத்துறை அருகே, விழா நடத்த இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. வருவாய்த்துறையினர் கூறுகையில், ஆடிப்பெருந்திருவிழா மூலம் திருமூர்த்திமலையின் சுற்றுலா அம்சங்கள் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. அரசுத்துறைகளின் அரங்குகள் மூலம் அங்கு வரும் மக்களுக்கு திட்டங்கள் குறித்த விளக்கமும் அளிக்கப்படுகிறது. நாட்டுப்புற கலைகளை ஊக்குவிக்கும் நிகழ்வாகவும், இந்த விழா அமைகிறது என்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
வைகுண்ட ஏகாதசி விரதத்திற்கு பாவத்தைப் போக்கும் சக்தி உண்டு. அஸ்வமேத யாகம் செய்த பலனை ஏகாதசிவிரதத்தால் ... மேலும்
 
temple news
அயோத்தி; அயோத்தில் ஸ்ரீ ராம் ஜன்மபூமி தீர்த்த க்ஷேத்ரா அறக்கட்டளையால் ஏற்பாடு செய்யப்பட்ட ... மேலும்
 
temple news
திருச்சி:  ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் வைகுண்ட ஏகாதசி பெருவிழா சிறப்பாக நடைபெற்று வருகிறது. ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: வல்லக்கோட்டை முருகன் கோவிலில், திருக்கல்யாண உத்சவம் வெகு விமரிசையாக நேற்று நடந்தது. ... மேலும்
 
temple news
கோவை; மார்கழி மாதம் இரண்டாவது சோமவார திங்கட் கிழமையை முன்னிட்டு கோவை சிங்காநல்லூர் பஸ் ஸ்டாண்ட் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar