பதிவு செய்த நாள்
22
ஜூலை
2015
12:07
அந்தியூர்: அந்தியூர் அடுத்த புதுப்பாளையம் குருநாதஸ்வாமி கோவில், தமிழகத்தில் புகழ் பெற்ற கோவிலாகும். ஆண்டுதோறும், ஆடி மாதம் தேர்திருவிழாவுடன், மாடு மற்றும் குதிரைச்சந்தையும் நடக்கும். இன்று பூச்சாட்டுதலுடன், துவங்கும் விழா, வரும், 29ம் தேதி கொடி ஏற்றுதலும், ஆக., 5ம் தேதி முதல் வனபூஜையும், 12 முதல், 15ம் தேதி வரை, ஆடி பெருந்தேர்திருவிழாவுடன், மாடு மற்றும் குதிரை சந்தையும் நிறைவடைகிறது.