புதுச்சேரி : நைனார்மண்டபம் சுதானா நகர் செல்வவிநாயகர் கோவிலில் 7ம் ஆண்டு நிறைவு விழாவையொட்டி 108 சங்காபிஷேகம் நடந்தது.நிறைவு விழாவில் தொகுதி எம்.எல்.ஏ., பாஸ்கர் முன்னிலையில் மதியம் சமபந்தி விருந்து நடந்தது.இரவு செல்வாம்பிகை சமேத செல்வபுரீஸ்வரர், செல்வ விநாயகர், பாலமுருகருக்கு அலங்கார சோடச ஆராதனை நடந்தது.