திருவதிகை வீரட்டானேஸ்வரர் கோவிலில் முளைப்பாரி உற்சவம்!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
22ஜூலை 2015 01:07
பண்ருட்டி: பண்ருட்டி திருவதிகை வீரட்டானேஸ்வரர் கோவிலில் ஸ்ரீவராகி அம்மனுக்கு முளைப்பாரி உற்சவம் நடந்தது. பண்ருட்டி திருவதிகை வீரட்டானேஸ்வரர் கோவிலில் ஆடிமாதம் முன்னிட்டு ஸ்ரீவராகி அம்மனுக்கு சிறப்பு பூஜை நடந்து வருகிறது. முளைப்பாரி உற்சவத்தை முன்னிட்டு நவதானியங்கள் முளைப்பு விடப்பட்டு அதனை ஊர்வலமாக எடுத்து வந்து அம்மனுக்கு வைத்து சிறப்பு வழிபாடு நடத்தினர். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை வழிபட்டனர்.