நத்தம்: மாயம்மன் கோயிலில் ஆடி மாத முதல் வாரத்தை முன்னிட்டு சிறப்பு பூஜை நடந்தது. ஆண்டு தோறும் மாரியம்மன் கோயிலில் நடக்கும் சி றப்பு பூஜைகள் இந்த ஆண்டும் நடந்தது. நத்தம் சுற்றுப்பகுதியை சேர்ந்த விவசாயிகள் தங்களது தோட்டங்களில் விளைந்த பூக்களை ஊர்வலமாக எடுத்து வந்தனர். தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு மலர் அலங்காரம் மற்றும் அபிஷேக ஆராதனைகள் நடந்தது. திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.