நடுவீரப்பட்டு: சி.என்.பாளையம் சொக்கநாதன்பேட்டை முத்துமாரியம்மன் கோவிலில் வரும் 24ம் தேதி செடல் திருவிழா நடக்கிறது. விழாவை முன்னிட்டு 21ம் தேதி சாகை வார்த்தல் நடந்தது. தொடர்ந்து 24ம் தேதி காலை 9:00 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனையும், அதனைத் தொடர்ந்து செடல் திருவிழாவும் நடக்கிறது. இரவு அலங்கரிக்கப்பட்ட அம்மன் வீதியுலா நடக்கிறது.