பதிவு செய்த நாள்
23
ஜூலை
2015
02:07
வடமதுரை: வடமதுரையில் சவுந்தரராஜப் பெருமாள் கோயில் ஆடித்திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது. மண்டபடிதாரர் சரவணமூர்த்தி மற்றும் உடையாம்பட்டி கிராம மக்கள், கொடிப்படத்தை வடமதுரை ரத வீதிகள் வழியே ஊர்வலம் சென்று கோயிலுக்குள் கொண்டு வந்தனர். கொடிமரம் முன்பாக ஸ்ரீதேவி, பூமாதேவியுடன் சவுந்தரராஜப் பெருமாள் எழுந்தருள, சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு கொடியேற்றப்பட்டது. 13 நாட்கள் நடைபெறும் திருவிழாவில் நாள்தோறும் இரவு அனுமார், அன்ன, சிம்ம, கருட, சேஷ, யானை, புஷ்ப, குதிரை, ஊஞ்சல் கருட, விடையாத்தி குதிரை என பல வாகனங்களில் சுவாமி புறப்பாடும், மண்டகபடிதாரர் கலை நிகழ்ச்சிகளும் நடைபெறும். முக்கிய நிகழ்ச்சிகளாக ஜூலை 29ல் திருக்கல்யாணமும், ஜூலை 31ல் தேரோட்டமும், ஆக.2ல் வசந்தம் முத்துபல்லக்கு வைபவமும் நடக்கிறது. விழா ஏற்பாட்டினை செயல் அலுவலர் வேலுச்சாமி, தக்கார் வேல்முருகன் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்து வருகின்றனர்.