பதிவு செய்த நாள்
24
ஜூலை
2015
12:07
கடலூர்: கடலூர் பகவதி கழுத்து மாரியம்மன் கோவில் ஆடித் திருவிழா வரும் 29ம் தேதி துவங்குகிறது. கடலூர், மஞ்சக்குப்பம் நேதாஜி சாலையில் உள்ள பகவதி கழுத்து மாரியம்மன் கோவிலில் ஆடித் திருவிழாவை முன்னிட்டு வரும் 29ம் தேதி காலை 8:00 மணிக்கு மகா அபிஷேகம், புஷ்ப அலங்காரம், இரவு 7:00 மணிக்கு தீபாராதனை நடக்கிறது. 30ம் தேதி, காலை 8:00 மணிக்கு மகா அபிஷேகம், இரவு 7:00 மணிக்கு சந்தன அலங்காரம், தீபாராதனை நடக்கிறது. 31ம் தேதி காலை 8:00 மணிக்கு பெண்ணையாற்றில் இருந்து கரகம் கொண்டு வருதல், 11:00 மணிக்கு மகா அபிஷேகம், தீபாராதனை, பகல் 12:00 மணிக்கு சாகை வார்த்தல், இரவு 7:00 மணிக்கு சந்தன அலங்காரம், தீபாராதனை, 8:00 மணிக்கு வீதியுலா நடக்கிறது.