பதிவு செய்த நாள்
30
ஜூலை
2015
02:07
திருவள்ளூர்: திருநின்றவூர், கிருஷ்ண ஷீரடி சந்தான சாய்பாபா கோவில் கும்பாபிஷேகம், நாளை நடைபெற உள்ளது.திருநின்றவூர் அடுத்த நத்தமேடு, ராகவேந்திரா நகரில், புதிதாக கிருஷ்ண ஷீரடி சந்தான சாய்பாபா கோவில் கட்டப்பட்டு உள்ளது. இதற்கான கும்பாபிஷேக விழா, கடந்த 28ம் தேதி, கணபதி பூஜை, யாக பூஜைகளுடன் துவங்கியது. இன்று, 2ம் கால யாக பூஜையும், சந்தான கணபதி, சந்தான சாய்பாபா மற்றும் ஆரியம்மன் ஆகிய மும்மூர்த்தி பிரதிஷ்டையும் நடக்கின்றன.இதையடுத்து, மகா கும்பாபிஷேகம், நாளை காலை 7:35 மணிக்கு மேல் நடக்கிறது. பின், சாய்பாபா உள்ளிட்ட மும்மூர்த்திகளுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, மகா தீபாராதனை நடைபெறும். மாலை 5:00 மணிக்கு மேல் சாய்பாபா பஜனை நடைபெறும்.