பீவி பாத்திமா அம்மா தர்காவில் கந்தூரி விழா: புனித கொடி ஏற்றத்துடன் துவங்கியது!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
30ஜூலை 2015 04:07
திருவாரூர்: திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை அடுத்த ஜாம்புவானோடை உலக புகழ் பெற்ற சேக் தாவூது ஆண்டவர் தர்கா வளாகத்தில் உள்ள பீவி பாத்திமா அம்மா தர்காவின் 4-ம் ஆண்டு கந்தூரி விழா நேற்று மாலை கொடி ஏற்றத் துடன் துவங்கியது. சேக் தாவூது ஆண்டவர் தர்காவிலிருந்து கந்தூரி ஊர்வலம் புறப்பட்டு ஆற்றா ங்கரை தர்கா சென்ற அம்மா தர்காவை சென்றடைந்தது. அதன் பின்னர் அம்மா தர்காவில் புனித மௌலூது சரீப் ஓதப்பட்டு உலக அமைதிக்காக துஆ(பிரார்த் தனை) நடைபெற்றது. அதன் பின்னர் தர்கா வாசலில் உள்ள புனித கொடி மரத்தில் தர்கா முதன்மை அறங்காவலர் எஸ்.எஸ்.பாக்கர் அலி சாஹிப் தலைமையில் டிரஸ்டி ஜெக்க ரியா சாஹிப் துஆ ஓதப்பட்டு புனித கொடி ஏற்றப்பட்டது. இதில் டிரஸ்டி தமீம் அன்சாரி சாஹிப் மற்றும் முத்துப்பேட்டை நாச்சிக்குளம், அதிராம்பட்டினம், துளசியாப்பட்டினம் உட்பட பல்வேறு பகுதியிலிருந்து ஏராளமான இஸ்லாமியர்கள் கலந்துக் கொண்டனர். 4 நாட்கள் நடைபெறும் இந்த கந்தூரி விழாவில் பல்வேறு நிகழ்கவுகளுக்குப் பின் புனித கொடி இறக்கும் நிகழ்ச்சி நடைபெற்று நிறைவு பெற்று பிரசாதம் வழங்கப்படுகிறது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை தர்கா நிர்வாக கமிட்டியினர் செய்து வருகின்றனர்.