தாடிக்கொம்பு சவுந்திரராஜ பெருமாள் கோயிலில் திருக்கல்யாணம்!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
31ஜூலை 2015 11:07
தாடிக்கொம்பு: தாடிக்கொம்பு சவுந்திரராஜ பெருமாள் கோயில் ஆடித்திருவிழாவை முன்னிட்டு இன்று தேரோட்டம் நடக்கிறது. இக்கோயிலில் ஜூலை 23ல் கொடியேற்றத்துடன் விழா துவங்கியது. அன்று முதல் தினமும் காலையில் கேடயத்திலும், மாலையில் அன்னம், சிம்மம், யானை, கருடன் உள்பட பல்வேறு வாகனங்களில் சுவாமி புறப்பாடு நடந்தது. நேற்று முன்தினம் இரவு திருக்கல்யாணம், தொடர்ந்து பூப்பல்லக்கு நிகழ்ச்சி நடந்தது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான திருத்தேரோட்டம் இன்று மாலை 4 மணிக்கு நடக்கிறது. நளை மறுநாள் மாலை தெப்ப உற்சவத்துடன் விழா நிறைவடையும். ஏற்பாடுகளை செயல் அலுவலர் வேலுச்சாமி, தக்கார் ரமேஷ் செய்து வருகின்றனர்.