வடக்குவாசல் செல்வியம்மன் கோவிலில் பக்தர்கள் பால்குடம்!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
31ஜூலை 2015 11:07
முதுகுளத்தூர்:முதுகுளத்தூர் வடக்குவாசல் செல்வியம்மன் கோயில் 39 வது ஆண்டு பூச்சொரிதல் விழாவை முன்னிட்டு, நேற்று முன்தினம் முத்திருளாண்டி நடுவராக பணியாற்றிய மழலையர் பட்டிமன்றம், மங்கையர்கரசியின் "அம்மன் அருள் என்ற தலைப்பில் ஆன்மிக சொற்பொழிவு நடந்தது. பக்தர்கள் அக்னி சட்டி எடுத்து ஊர்வலமாக சென்றனர். நேற்று முதுகுளத்தூர், மு.தூரி, செல்வநாயகபுரம், இளஞ்செம்பூர், ஏனாதி, கிடாத்திருக்கை உட்பட 50க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த 8 ஆயிரம் பக்தர்கள் சுப்பிரமணிய சுவாமி கோயிலிலிருந்து பஸ் ஸ்டாண்ட், வழிவிடு முருகன் கோயில் வழியாக பால் குடம் எடுத்து ஊர்வலமாக சென்று,செல்வியம்மன் கோயிலில் நேர்த்திகடனை செலுத்தினர்.