பெங்களூரு :சிவாஜி நகர், சிவாஜி சாலையிலுள்ள ஷீரடி சாய்பாபா மந்திரில், இன்று குரு பூர்ணிமா விழா கொண்டாடப்படுகிறது.காலை, 7:00 - 9:00 மணி வரை, பாபாவுக்கு அபிஷேகம் நடத்தப்படுகிறது. 9:30 - 10:30 மணி வரை அலங்காரம் செய்யப்படுகிறது. 10:30 - 12:30 மணி வரை கிருஷ்ணமூர்த்தி, கவிதா, சாந்தாலா குழுவினர் பக்தி பாடல்கள் பாடுகின்றனர். பகல், 12:30 மணிக்கு, மஹா மங்களார்த்தி காண்பிக்கப்படுகிறது. 1:00 மணிக்கு பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது.