திருவாரூர்: திருவாரூர் அருகே விளமல் பதஞ்சலி மனோகரர் மற்றும் வேளுக்குடி ருத்ர கோடீஸ்வரர் கோவில்களில் நேற்று முன் தினம் நடந்த பிரதோஷத்தில் திர ளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.
விளமல்: திருவாரூர் அருகே விளமல் பதஞ்சலி மனோகரர் கோவிலில் பிரதோஷத்தை முன்னிட்டு கோவில் நுழைவு வாயிலில் உள்ள நந்திக்கு பல்வேறு திரவியங்கள் மற்றும் நறுமணப்பொருட்களால் சிறப்பு அபிஷேகம் செய்து, பின்னர் அம்பாள் மற்றும் சிவனுக்கு சிறப்பு பூஜை செய்து பக்த ர்களுக்குகோவில் சிவாச்சாரியர் சக்தி சந்திரசேகரர் அருள்பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கினார். இதில் சுற்றுப்பகுதி பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.
வேளுக்குடி: திருவாரூர் அருகே வேளுக்குடியில் உள்ள ருத்ரகோடீஸ்வர் மேற்கு பக்கமும்,ஸ்ரீ கோமலாம்பிகையம்மாள், தெற்கு பக்கம் பார்த்து அருள்பாலிக்கின்றனர். இங்கு காலைசந்தி, உச்சிக்காலம்,சாயரட்சை மற்றும் அர்த்த சாமம் என நான்கு கால பூஜை நடந்து வருகிறது. திருக்கோவில் நடக்கும் ஒரு பிரதோஷத்தை நேரில் பக்தர்கள் பார்த்து வழிபட்டால், ஒரு கோடி பிரதோஷத்தில் பங்கேற்ற மகிமை என்பதால் பக்தர்கள் அதிகவிளவில் பங்கேற்பது வழக்கம், நேற்று முன் தினம் ஆடி பிரதோஷத்தை முன்னிட்டு சிறப்பு வழிபாடும் நந்திக்கு பல்வேறு அபிஷேக ஆராதனை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு கோவில் அர்ச்சகர் சண்முகம் குருக்கள் பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கினார்.