திருவாரூர்: திருவாரூர், திருத்துறைப்பூண்டி சாய்பாபா கோவில்களில் நேற்று ஆடி பவு ணர்மியை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடந்தது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று பாபாவை வணங்கினர். திருத்துறைப்பூண்டி:திருத்துறைப்பூண்டியில் ஸ்ரீராம் உலக ரட்சகர் சீரடி சாய் பாபா சக்தி பீடம் சார்பில் ரூ. இரண்டு கோடி மதிப்பில் கோவில் கட்ட சமீபத்தில் பூமி பூஜை நடந்தது. ஜெய்ப்பூரில் மார்பிள் கல்லில் 5 அடி 9 அங்குலம் உயரத்தில் ரூ.8 லட்சத்து 50 ஆயிரம் செலவில் புதிதாக வடிவமைக்கப்பட்ட சாய்பாபா சிலையை சீரடிக்கு எடுத்துச் சென்று பூஜித்து திருத்துறைப்பூண்டியில் பிரதிஷட்டை செய்தனர். வியாழன் தோறும் சிறப்பு வழிபாடு மற்றும் ஆரத்தி நடந்து வருகிறது. நேற்று மதியம் 12.30 மணிக்கு ஆடி பவுர்ணமியை முன்னிட்டு நடந்த சிறப்பு ஆரத்தி மற்றும் வழிபாட்டில் அறங்காவல் குழு தலைவர் கருணாநிதி, அறக்கட்டளை நிர்வாகத்தினர் பங்கேற்றனர். ஆயிரகணக்கானவர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு அன்னதானம் மற்றும் பிரசாதங்கள் வழங்கப்பட்டது.
திருவாரூர்: திருவாரூர் சாய்புரம், வாசன் நகர் ஸ்கந்தசாய் அறக்கட்டளை சார்பில் புதிதாக கட்டப்பட்டுள்ள ஸ்கந்தசாய் பாபா கோவில் மற்றும் தியான மண்டபத்தில் நேற்று ஆடி பவுணர்மியை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடந்தது. இக்கோவிலில் 5அடி உயரத்தில் ஜெய்ப்பூரில் இருந்து ரூ.4.60 லட்சம் செல வில் பளிங்கு கல்லால் சாய்பாபா சிலை மற்றும் வெள்ளை வினாயகர், அகஸ் தியர், தத்தாத் ரேயர், ராதை–கிருஷ்ணர், நாகசுவாமி உள்ளிட்ட பரிவா ரதெய் வங்களுடன் சிலை பிரதிஷ்ட்டை தினசரி பூஜை நடந்து வருகிறது. நேற்று நடந்த சிறப்பு வழிபாடு, ஆரத்தியில் திரளான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை கோவில் அறங்காவலர் கருணாநிதி உள் ளிட்ட விழா குழுவினர்கள் செய்திருந்தனர்.