Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news தேவதானப்பட்டி மூங்கிலணை காமாட்சி ... காரைக்காலில் பஞ்சமூர்த்திகளுக்கு விடையாற்றி அபிஷேகம்! காரைக்காலில் பஞ்சமூர்த்திகளுக்கு ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பக்தர்கள் வடம் பிடிக்க.. ஆடி அசைந்த வந்த அழகர்கோவில் தேர்!
எழுத்தின் அளவு:
பக்தர்கள் வடம் பிடிக்க.. ஆடி அசைந்த வந்த அழகர்கோவில் தேர்!

பதிவு செய்த நாள்

01 ஆக
2015
11:08

அழகர்கோவில்,: அழகர்கோவில் சுந்தரராஜ பெருமாள் கோயில் ஆடித் திருவிழாவையொட்டி கோவிந்தா கோஷத்துடன் பக்தர்கள் வடம் பிடித்து இழுக்க தேரோட்டம் நடந்தது. கோயிலில் ஆடித் திருவிழா ஜூலை 23ல் துவங்கியது. தினமும் காலையில் தங்கப் பல்லக்கிலும், இரவில் பல்வேறு வாகனங்களிலும் பெருமாள் கோயிலை வலம் வந்தார். முக்கிய நிகழ்வாக தேரோட்டம் நேற்று நடந்தது. அதிகாலை 4 மணிக்கு ஸ்ரீதேவி, பூமா தேவியுடன் புறப்பட்ட பெருமாள் தேரில் எழுந்தருளினார். காலை 5.30 மணிக்கு சுவாமிக்கு பல்வேறு ஆராதனைகள் நடந்தன. காலை 7.10 மணிக்கு தேருக்கு தீபாராதனை நடந்தது. நாட்டார்கள் வெண் கொடி வீச பக்தர்கள் கோவிந்தா கோஷங்கள் எழுப்பி தேரை வடம் பிடித்து இழுத்தனர். ஆடி, அசைந்து வலம் வந்த புதிய தேர் காலை 10.20 மணிக்கு நிலைக்கு வந்தது.ஆடிப்பவுர்ணமியை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் 18ம் படி கருப்பண சுவாமிக்கு சந்தன காப்பு செலுத்துவதற்காக நடை பயணமாக கோயிலுக்கு வந்தனர். இரவு முதல் காலை வரை சுவாமிக்கு சந்தன காப்பு நடந்தது. ஆடி அமாவாசை அன்றும் 18ம் படி கருப்பண சுவாமிக்கு சந்தனக் காப்பும், அன்று இரவு கருட வாகனத்தில் சுவாமி புறப்பாடும் நடக்கிறது. ஏற்பாடுகளை தக்கார் வெங்கடாஜலம், நிர்வாக அதிகாரி செல்லத்துரை தலைமையில் பணியாளர்கள் செய்திருந்தனர். அரசு உத்தரவு காரணமாக தற்காலிக கடைகள் வைக்க அனுமதிக்கப்படவில்லை.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
செஞ்சி; மேல்மலையனூர் அங்காளம்மன் கோவிலில் நடந்த அமாவாசை ஊஞ்சல் உற்சவத்தில் லட்சக்கணக்கான பக்தர்கள் ... மேலும்
 
temple news
திருப்பதி; திருச்சானூர் கார்த்திகை பிரம்மோற்சவ விழாவில் இன்று காலை கல்ப விருட்ச வாகனத்தில் தாயார் ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை; திருவண்ணாமலை, அருணாசலேஸ்வரர் கோவில் தீப திருவிழா நாளை (நவ 21ம் தேதி) துவங்கி டிச 7ம் தேதி ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை; வழுவூர் வீரட்டேஸ்வரர் கோயிலில் கார்த்திகை அமாவாசையை முன்னிட்டு, மலை மற்றும் காடுகளில் ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூண், கார்த்திகை மகா தீபம் ஏற்றப்படும் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar