பாபா கோவிலில் 5 அடி உயரத்தில் அணையா விளக்கு பிரதிஷ்ட்டை!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
03ஆக 2015 01:08
திருவாரூர்: திருவாரூர் வாசன் ஸ்ரீ கந்தசாய் அறக்கட்டளை பாபா கோவிலில் 5 அடி உயரத்தில் அணையா விளக்கு பிரதிஷ்ட்டை செய்து, மறைந்த மாஜி., குடியரசு தலைவர் அப்துல்கலாம் அத்மா சாந்தியடைய சிறப்பு யாகம் நடத்தினர். திருவாரூர் சாய்புரம், வாசன் நகர் ஸ்கந்தசாய் அறக்கட்டளை சார்பில் புதிதாக ஸ்கந்தசாய் பாபா கோவில் மற்றும் தியான மண்டபம் கட்டப்பட் டுள்ளது. இக்கோவிலில் 5அடி உயரத்தில் ஜெய்ப்பூரில் இருந்து ரூ.4.60 லட்சம் செல வில் பளிங்கு கல்லால் சாய்பாபா சிலை மற்றும் வெள்ளை வினாயகர், அகஸ் தியர், தத்தாத் ரேயர், ராதை– கிருஷ்ணர், நாகசுவாமி உள்ளிட்ட பரிவார தெய்வங்களுடன் சிலை பிரதிஷ்ட்டை தினசரி பூஜையும், வியாழன் தோறும் சிறப்பு பூஜையும் நடந்து வருகிறது. நேற்று முன் தினம் ஆடிபவுணர்மியை முன்னிட்டு சிறப்பு வழிபாடு மற்றும் 5 அடி உயரத்தில் அணை விளக்கு பிரதிஷ்ட்டை செய்தனர். பின்னர் நடந்த சிறப்பு வழிபாடு, ஆரத்தியில் திரளான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை கோவில் அறங்காவலர் கருணாநிதி உள் ளிட்ட விழா குழுவினர்கள் செய்திருந்தனர். சாய்பாபாவிற்கு, பக்தர்கள் 10 ரூபாய் நோட்டில் மாலை அணிவித்து வண ங்கினர். மறைந்த மாஜி., குடியரசு தலைவர் அப்துல்கலாம் ஆத்மா சாந்தியடைய சிறப்பு யாகம் நடத்தினர்.