சிங்கம்புணரி: சிங்கம்புணரி சித்தர் முத்துவடுகநாதர் கோயிலில் ஆடிப்பெருக்கு விழா நடந்தது. சிறப்பு அபிஷேகம் ஆராதனை நடந்தது. பரிவார தெய்வங்களான முத்து விநாயகர், முத்துக்கருப்பர், நாகராஜாவிற்கு அபிஷேகம் நடந்தது.பெண்கள் மாவிளக்கு வழிபாடு செய்தனர். சித்தர் முத்துவடுகநாதர் கோயிலில் ஆடி பெருக்கையொட்டி அன்னதானம் வழங்குவதற்காக அன்னக்குவியல் வைத்து, சிறப்ப வழிபாடு செய்து அன்னதானம் வழங்கப்பட்டது. விழாவில் வெள்ளி அங்கியில் முத்துவடுகநாதர் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். சிங்கம்புணரி வணிகர்நலச்சங்கம்,அன்னதான இளைஞர் குழுவினர் ஏற்பாடுகளை செய்திருந்தனர்.