தேவர்களும், அசுரர்களும் பாற்கடலைக் கடந்த போது வலம்புரிச் சங்கு வெளிவந்தது. மகாவிஷ்ணு அதை தன் இடதுகரத்தில் தாங்கிக் கொண்டார். இது லட்சுமியின் அம்சமாக உள்ளது. குபேரன் வாசம் செய்யும் சங்கு ஐஸ்வர்யம், மங்கலம், வீரம் ஆகியவற்றின் சின்னமாக விளங்குகிறது. சங்கை பழங்காலத்தில் நத்தார் படை (போர்களத்தில் எழுச்சியூட்டும் கருவி) என்று குறிப்பிட்டனர். வலம்புரிச்சங்கில் நீர் விட்டு, கும்பத்தின் மேல் வைத்து, சுவாமிக்கு அபிஷேகம் செய்வது வழக்கமாக உள்ளது. ஏனெனில், சங்கில் விடும் சாதாரண நீரும் கூட புனித தீர்த்தமாகி விடும். சங்கில் செல்வத்திற்கு அதிபதியான குபேரன் வாசம் செய்கிறார். வங்காளிப் பெண்கள், சுபநிகழ்ச்சிகளில் சங்கு வளையல் அணிவதை புனிதமானதாகக் கருதுகின்றனர்.