திருமாலுக்கு மிகவும் உகந்த விரதம் ஏகாதசி. 15 நாளுக்கு ஒரு முறை வரும் இந்த திதியை புண்ணிய காலம் என்பர். இதில் மார்கழியில் வரும் வைகுண்ட ஏகாதசி பிரபலமாக இருக்கிறது. ஓராண்டில் 25 ஏகாதசிகள் வருகின்றன. இந்த நாளில் விரதமிருந்தால் வாழும் போது செல்வச்செழிப்பும், வாழ்வுக்குப் பின் மோட்சமும் கிடைக்கும்.
1. பாபமோசனிகா ஏகாதசி - சித்திரை மாதம் தேய்பிறை 2. காமதா ஏகாதசி - சித்திரை மாதம் வளர்பிறை 3. வருதினி ஏகாதசி - வைகாசி தேய்பிறை 4. மோகினி ஏகாதசி - வைகாசி வளர்பிறை 5. அபரா ஏகாதசி - ஆனி தேய்பிறை 6. நிர்ஜலா ஏகாதசி - ஆனி வளர்பிறை 7. யோகினி ஏகாதசி - ஆடி தேய்பிறை 8. சயினி ஏகாதசி - ஆடி வளர்பிறை 9. காமிகா ஏகாதசி - ஆவணி தேய்பிறை 10. புத்ரகா ஏகாதசி - ஆவணி வளர்பிறை 11. அஜாரகா ஏகாதசி - புரட்டாசி தேய்பிறை 12. பத்மநாபா ஏகாதசி - புரட்டாசி வளர்பிறை 13. இந்திரா ஏகாதசி - ஐப்பசி தேய்பிறை 14. பாபங்குகா ஏகாதசி - ஐப்பசி வளர்பிறை 15. ரமா ஏகாதசி - கார்த்திகை தேய்பிறை 16. பிரபோதினி ஏகாதசி - கார்த்திகை வளர்பிறை 17. உற்பத்தி ஏகாதசி - மார்கழி தேய்பிறை 18. வைகுண்ட ஏகாதசி - மார்கழி வளர்பிறை 19. ஸபலா ஏகாதசி - தை தேய்பிறை 20. புத்ரதா ஏகாதசி- தை வளர்பிறை 21. ஷட்திலா ஏகாதசி - மாசி தேய்பிறை 22. ஜயா ஏகாதசி - மாசி வளர்பிறை 23. விஜயா ஏகாதசி - பங்குனி தேய்பிறை 24. ஆமலகீ ஏகாதசி - பங்குனி வளர்பிறை 25. கமலா ஏகாதசி - இந்த ஏகாதசிக்குரிய தினத்தை பஞ்சாங்கத்திலேயே தெரிந்து கொள்ள முடியும். இந்த திதி வரும் மாதத்தை புருஷோத்தம மாதம் (பெருமாளுக்குரிய மாதம்) என்று சிறப்பிப்பர்.