Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய சிறப்பு! ஆண்டாள் கோயிலில் ஐந்து கருட சேவை: திரளான பக்தர்கள் தரிசனம்! ஆண்டாள் கோயிலில் ஐந்து கருட சேவை: ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மதுரை மீனாட்சி அம்மன் ஆவணி மூலத் திருவிழா துவங்கியது!
எழுத்தின் அளவு:
மதுரை மீனாட்சி அம்மன் ஆவணி மூலத் திருவிழா துவங்கியது!

பதிவு செய்த நாள்

13 ஆக
2015
10:08

மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் ஆவணி மூல திருவிழா கொடியேற்றத்துடன் நேற்று துவங்கியது.விழாவில் ஆக., 16ல் ஆடிப்பூரத்தை முன்னிட்டு உச்சிகால பூஜை வேளையில் மூலஸ்தான மீனாட்சி அம்மனுக்கும், உற்சவர் மீனாட்சி அம்மனுக்கும் ஏற்றி இறக்கும் வைபவம் நடக்கிறது. ஆக., 24ல் சுவாமி சன்னதி ஆறுகால் பீடத்தில் இரவு 7.33 முதல் 7.57 மணிக்குள் சுந்தரேஸ்வரருக்கு பட்டாபிஷேகம் நடக்கிறது. ஆக., 26ல் சுவாமி கோயிலில் இருந்து புட்டுத்தோப்பிற்கு எழுந்தருள்வார். புட்டுத்தோப்பு மண்டபத்தில் மதியம் 3.22 முதல் 3.46 மணிக்குள் பிட்டுக்கு மண் சுமந்த லீலையும், மண்சாத்துதலும் நடக்கிறது. புட்டுத்திருவிழா முடிந்து கோயிலுக்குள் சுவாமி வரும் வரை நடை சாத்தப்பட்டிருக்கும்.ஆக., 30ல் திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமியும், திருவாதவூர் மாணிக்கவாசகர் சுவாமியும் புறப்பாடாகி, கோயிலின் அலுவலக மண்டகப்படிக்கு எழுந்தருளி தீபாராதனை நடக்கும்.திருவிளையாடல்: ஆக., 18: கருங்குருவிக்கு உபதேசம் செய்தல். ஆக., 19: நாரைக்கு முக்தி கொடுத்தல். ஆக., 20: மாணிக்கம் விற்றது. ஆக., 21: தருமிக்கு பொற்கிழி அளித்தது. ஆக., 22: உலவாக்கோட்டை அருளியது. ஆக., 23: பாணனுக்கு அங்கம் வெட்டியது. ஆக., 24: வளையல் விற்றது. ஆக., 25: நரியை பரியாக்கியது. ஆக., 26: பிட்டுக்கு மண் சுமந்தது. ஆக., 27: விறகு விற்றது திருவிளையாடல் நிகழ்ச்சிகள் நடக்கிறது. ஏற்பாடுகளை தக்கார் கருமுத்து கண்ணன், இணை கமிஷனர் நடராஜன் செய்துள்ளனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சிவன்மலை கோவில் ஆண்டவர் உத்தரவுப்பெட்டியில், மண் கலயத்தில் கடல்நீர் வைத்து நேற்று சிறப்பு வழிபாடு ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவில், அனந்தபுஷ்கரணி குளக்கரையோரம் சிமென்ட் கல் சாலை அமைக்கும் பணி ... மேலும்
 
temple news
புரட்டாசி மாத மூன்றாவது சனிக்கிழமையான நேற்று, பெருமாள் கோவில்களில் கோவிலில் சிறப்பு பூஜைகள் ... மேலும்
 
temple news
அவிநாசி அருகே வெள்ளியம்பாளையத்தில் உள்ள ஸ்ரீ பூமி நீளா சமேத ஸ்ரீ கரி வரதராஜ பெருமாள் கோவிலில், ... மேலும்
 
temple news
போடி: புரட்டாசி மூன்றாம் சனிக்கிழமையை முன்னிட்டு மாவட்டத்தில் உள்ள பெருமாள் கோயில்களில் பக்தர்கள் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar