பதிவு செய்த நாள்
13
ஆக
2015
11:08
கள்ளக்குறிச்சி:கள்ளக்குறிச்சி பகுதி சிவன் கோவில்களில் ஆடி மாத இரண்டாம் பிரதோஷ வழிபாடு நடந்தது.கள்ளக்குறிச்சி அடுத்த நீலமங்கலம் செம்பொற்ஜோதிநாதர் கோவிலில் ஆடி பிரதோஷ வழிபாடு நடந்தது. இதையொட்டி சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்து, பூஜைகள் நடத்தினர்.அதேபோல் கள்ளக்குறிச்சி சிதம்பரேஸ்வரர் கோவில், கமலா நேரு தெரு ஏகாம்பரேஸ்வரர், ஏமப்பேர் விஸ்வநாதர், நீலமங்கலம் ஏகாம்பரேஸ்வரர், முடியனூர் அருணாசலேஸ்வரர், தென்கீரனூர் அருணாசலேஸ்வரர், வரஞ்சரம் பசுபதி ஈஸ்வரர், வடக்கனந்தல் உமாமகேஸ்வரர் ஆகிய கோவில்களிலும் பிரதோஷ வழிபாடு நடந்தது.உற்சவர் சிலைகள் அலங்கரிக்கப்பட்டு தேவாரம், திருவாசகம் பாடி, கோவில் பிரகாரத்தை வலம் வந்தனர்.சின்னசேலம் :தென்பொன்பரப்பி சொர்ணபுரீஸ்வரர் கோவிலில் ஆடி பிரதோஷயொட்டி மூலவருக்கு சிறப்பு அலங்காரமும், நந்தீஸ்வரருக்கு அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடத்தி மகா தீபாராதனை நடந்தது. சின்னசேலம் கங்காதீஸ்வரர் கோவில், ராயர்பாளையம் குமாரதேவர் மடம் பழமலைநாதர் கோவில், கூகையூர் சொர்ணபுரீஸ்வரர் கோவில், பஞ்சாட்சர நாதர் கோவில்களிலும் பிரதோஷ வழிபாடு நடந்தது.