ஸ்ரீவி., ஆண்டாள் கோயிலில் ஐந்து கருட சேவை கோலாகலம்!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
14ஆக 2015 10:08
ஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் ஆடிப்பூர விழா ஐந்து கருட சேவையை ஏராளமான பக்தர்கள் தரிசித்தனர்.ஸ்ரீவில்லிபுத்தூரில் ஆண்டாள் ஆடிப்பூர திருவிழா கடந்த 8ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தினமும் ஆண்டாள்- ரெங்கமன்னார் மண்டபங்களுக்கு எழுந்தருள்கின்றனர். விழாவின் ஐந்தாம் நாளில் ஐந்து கருடசேவை நடந்தது. காலை 10 மணிக்கு பெரியாழ்வார் ஆடிப்பூர பந்தலுக்கு எழுந்தருள அங்கு சுந்தரராஜபெருமாள், ஸ்ரீனிவாசபெருமாள், திருத்தங்கால் அப்பன், ஆண்டாள்-ரெங்கமன்னார் ஆகியோருக்கு மங்களாசாசனம் நடந்தது. விஜயபாஸ்கர் பட்டர், அனந்தராமகிருஷ்ணன் பட்டர், ஸ்தானிகம் ரமேஷ் மற்றும் பட்டர்கள் பங்கேற்றனர். மாலையில் அனைத்து பெருமாள்களுக்கும் நவகலச திருமஞ்சனம் நடந்தது. இரவு 10 மணிக்கு ஐந்துகருட சேவை நடந்தது. திரளான பக்தர்கள் பங்கேற்றுசுவாமி தரிசனம் செய்தனர்.