Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

Prev temple news வேதாரண்யம் கோடியக்கரை கடலில் புனித ... திருத்தணி முருகன் கோவிலில் ஆடிப்பூரம் கோலாகலம் திருத்தணி முருகன் கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஸ்ரீவி., ஆண்டாள் கோவில் ஆடிப்பூர தேரோட்டம்!
எழுத்தின் அளவு:
ஸ்ரீவி., ஆண்டாள் கோவில் ஆடிப்பூர தேரோட்டம்!

பதிவு செய்த நாள்

17 ஆக
2015
09:08

ஸ்ரீவில்லிபுத்துார்: விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயில் ஆடிப்பூர தேரோட்டம் நேற்று கோலாகலமாக நடந்தது. கோவிந்தா, கோபாலா என்ற கோஷத்துடன் ஏராளமான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர். இக்கோயில் ஆடிப்பூர தேரோட்ட திருவிழா ஆக., 8ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. தினமும் பகலில் ஆண்டாள், ரெங்கமன்னார் மண்டபங்களில் எழுந்தருளினர். இரவில் வாகன புறப்பாடும் நடந்தது. நேற்று முன்தினம் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோயில், மதுரை அழகர்கோவிலில் இருந்து சீர் கொண்டு வரப்பட்டு ஆண்டாள், ரெங்கமன்னாருக்கு சாத்தப்பட்டது. 9ம் நாளான நேற்று அதிகாலை பிரம்ம முகூர்த்தத்தில் ஆண்டாள், ரெங்கமன்னார் தேரில் எழுந்தருளினர். அங்கு அனந்தராமன், சுதர்சன் பட்டர்கள் வேதபாராயணம் பாடினர். ரகு பட்டர், விஜயபாஸ்கர பட்டர் சிறப்பு அலங்காரம், பூஜைகள் செய்தனர். காலை 8.05 மணிக்கு தேர் வடம் பிடித்து இழுக்கப்பட்டது. அமைச்சர்கள் காமராஜ், ராஜேந்திர பாலாஜி, கோகுல இந்திரா, எம்பி.,க்கள் வசந்தி முருகேசன், ராதாகிருஷ்ணன், ஸ்ரீவில்லிபுத்துார் எம்.எல்.ஏ., பொன்னுபாண்டியன், அறநிலையத்துறை கமிஷனர் வீரசண்முக மணி, விருதுநகர் கலெக்டர் ராஜாராமன், அபய்குமார் சிங் ஐ.ஜி., ஆனந்தகுமார் சோமானி டி.ஐ.ஜி., துவக்கி வைத்தனர்.

கோவிந்தா, கோபாலா என்ற கோஷத்துடன் ஏராளமானோர் வடம் பிடித்து இழுத்தனர். பக்தர்களின் வெள்ளத்தின் நடுவே நான்குரதவீதிகளைச் சுற்றி அசைந்து ஆடி வந்த தேர், காலை 10.45 மணிக்கு நிலை சேர்ந்தது. இதன்பின் பக்தர்கள் தேரில் ஏறி தரிசனம் செய்தனர். விழா ஏற்பாடுகளை அறநிலையத்துறை இணைஆணையர் செல்வராஜ், தக்கார் ரவிச்சந்திரன், நிர்வாக அதிகாரி ராமராஜா செய்தனர். விருதுநகர் மகேஷ்வரன் எஸ்.பி., தலைமையில் 800 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் சங்கர மடத்துக்கு சென்னையை சேர்ந்த பக்தர் ஒருவர், ஐம்பொன்னால் செய்யப்பட்ட ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: வல்லக்கோட்டை சுப்பிரமணியசுவாமி கோவிலுக்கு, மயில் வாகனத்தை பக்தர் ஒருவர் நன்கொடையாக ... மேலும்
 
temple news
கோவை: ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் சார்பில், எப்போ வருவாரோ ஆன்மிகத் தொடர் சொற்பொழிவு நிகழ்ச்சி, கிக்கானி ... மேலும்
 
temple news
திருப்புத்துார்: திருப்புத்துார் திருத்தளிநாதர் கோயிலில் தைப்பூச விழாவை முன்னிட்டு அம்மன் ... மேலும்
 
temple news
திருப்புத்துார்: திருப்புத்துார் திருத்தளிநாதர் கோயிலில் மார்கழி தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar