பதிவு செய்த நாள்
17
ஆக
2015
11:08
கடலுார்: திருவந்திபுரம் தேவநாத சுவாமி கோவிலில் நடந்த ஆடிப்பூர உற்சவத்தில் பெருமாள், ஆண்டாள் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தனர். கடலுார், திருவந்திபுரத்தில் உள்ள, தேவநாத சுவாமி கோவிலில் ஆடிப்பூர உற்சவம் கடந்த 7ம் தேதி துவங்கியது. தினமும், ஆண்டாளுக்கு திருமஞ்சனம் நடந்தது. ஆடிப்பூரமான, நேற்று காலை, பெருமாளுக்கும், ஆண்டாளுக்கும் சிறப்பு திருமஞ்சனம் நடந்தது. மாலையில், சேவை சாற்றுமுறையும், பெருமாள், ஆண்டாள் விசேஷ அலங்காரத்தில், கோவிலில் இருந்து புறப்பாடாகி, மேள தாளங்கள் முழங்க, ரதத்தில் வீதியுலா நடைபெற்றது. திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
புதுப்பாளையம்: புதுப்பாளையம், செங்கமல வள்ளித் தாயார் சமேத ராஜகோபால சுவாமி கோவிலில் நடந்த ஆடிப்பூர உற்சவத்தில் ஆண்டாளுக்கும், பெருமாளுக்கும் சிறப்பு திருமஞ்சனம் நடந்தது. இரவு 7:00 மணிக்கு, ஆண்டாள் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். சுவாமி கோவில் உள்புறப்பாடு நடந்தது.