பதிவு செய்த நாள்
17
ஆக
2015
01:08
திருத்தணி: தேசம்மன் கோவிலில், நேற்று, ஆடித் திருவிழாவை முன்னிட்டு, பொங்கல் வைத்து, உற்சவர் அம்மன் வீதியுலா நடந்தது. திருத்தணி அடுத்த, ராமகிருஷ்ணாபுரம் கிராமத்தில் தேசம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் நேற்று, ஆடித் திருவிழாவை முன்னிட்டு மூலவர் அம்மனுக்கு, காலை, 9:00 மணிக்கு பால்குட அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து, சிறப்பு அலங்காரம் மற்றும் தீபாராதனை நடைபெற்றது. பின், கூழ் வார்த்தல் நிகழ்ச்சியும், மாலை, 4:00 மணிக்கு, கோவில் வளாகத்தில், திரளான கிராம பெண்கள் பொங்கல் வைத்தல் நிகழ்ச்சி நடந்தது. இரவு, 7:30 மணிக்கு, உற்சவர் அம்மன் சிறப்பு அலங்காரத்துடன், கிராம வீதிகளில் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.