Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
மாமல்லபுரம் சின்னம்மன் கோவிலில் ... நாமக்கல் மகா மாரியம்மன் கோவில்: ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருப்போரூர் கந்தசாமி கோவிலில் 100 அடிக்கு நிழற்குடை தேவை!
எழுத்தின் அளவு:
திருப்போரூர் கந்தசாமி கோவிலில் 100 அடிக்கு நிழற்குடை தேவை!

பதிவு செய்த நாள்

18 ஆக
2015
11:08

திருப்போரூர்: திருப்போரூர் கந்தசாமி கோவிலில், பக்தர்களுக்காக அமைக்கப்பட்ட நிழற்குடையை, மேலும் 100 அடிக்கு நீட்டிக்க வேண்டும் என, கோரிக்கை விடுத்துள்ளனர். திருப்போரூர் கந்தசாமி கோவிலில், வேண்டுதல்; திருமணம்; மாத சிறப்பு வழிபாடு என, பக்தர்கள் அதிகரித்து வருகின்றனர். கோவில் வளாகத்தில், பக்தர்கள் காத்திருக்கவோ, இரவில் தங்கவோ இடவசதி இல்லை. அவர்கள் நலன் கருதி, பேரூராட்சி நிர்வாகம், சன்னிதி தெருவில், 2009ம் ஆண்டு, 12.50 லட்சம் ரூபாய் செலவில், 100 அடி நீள நிழற்குடை அமைத்தது. பக்தர்கள் அதிகளவில் வரும் நிலையில், மேலும், 100 அடி நீளத்திற்கு நிழற்குடையை நீட்டிக்க வேண்டும் என, பேரூராட்சி மன்றத்தில் அனுமதி பெறப்பட்டது. பேரூராட்சி பொதுநிதி, 15 லட்சம் ரூபாய் மதிப்பில், கடந்த ஆண்டு துவக்கத்தில் அமைக்க முயன்றபோது, நிழற்குடை கோபுரத்தை மறைக்கும்; சொக்கப்பனை தீயிட இடையூறு ஏற்படும் என, சிலரது மறைமுக தலையீட்டால், கிடப்பில் போடப்பட்டது. இப்பிரச்னையால், குறுகிய நிழற்குடை போதாமல், பக்தர்கள் திறந்தவெளியில் வெயிலிலும், மழையிலும் அவதிப்படுகின்றனர். இதுகுறித்து, கோவில் நிர்வாகத்தினர் கூறுகையில், சன்னிதி தெரு, பேரூராட்சி பகுதி என்பதால், நிழற்குடையை மேலும் நீட்டிக்க எங்களுக்கு ஆட்சேபணை இல்லை என்றனர். இதுகுறித்து, பேரூராட்சி நிர்வாகத்தினர் கூறுகையில், பக்தர்கள் நலன் குறித்து எதிர்ப்பாளர்களிடம் கூறி சமாதானப்படுத்தி, நிழற்குடை நீட்டிக்கப்படும் என்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
ஒருவர் பெற வேண்டிய மிக உயரிய செல்வம் ஞானம். அதை அருளும் சரஸ்வதி தேவி அவதார நாளாக வசந்த பஞ்சமி ... மேலும்
 
temple news
சென்னை: தை மாதத்த பிரம்மோற்சவ விழாவிற்கு உத்தரவு வாங்குவதற்காக சென்னை கந்தகோட்ட ம் முத்துக்குமார ... மேலும்
 
temple news
பாலக்காடு; ​கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டம் திருர் அருகே பாரதப்புழை (நிளா) நதியில் கங்கையின் ... மேலும்
 
temple news
பரமக்குடி; பரமக்குடி சுந்தரராஜ பெருமாள் தேவஸ்தானத்தைச் சேர்ந்த வண்டியூர் எனும் காக்கா தோப்பு சோலை ... மேலும்
 
temple news
தொண்டாமுத்தூர்; வெள்ளியங்கிரி மலை ஏற, பிப்., 1ம் தேதி முதல் பக்தர்களுக்கு அனுமதியளிக்கப்படும் என, ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar