Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news இன்று.. எதிரி தொல்லை நீங்கும் ... உடுமலை மாரியம்மன் கோவிலில் நாக சதுர்த்தி பூஜை! உடுமலை மாரியம்மன் கோவிலில் நாக ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பழநி செல்லும் பக்தர்கள் முதலில் தரிசிக்க வேண்டிய இடம்!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

19 ஆக
2015
11:08

பழநி: பொதுவாக நமக்கு கல்வியை போதிக்கும் ஆசிரியர்கள், நல்அறிவுரைகள் வழங்கும் ஆன்மிகபெரியோர்கள், பெற்றோர்களை கடவுளாக பாவித்தும் இன்றளவும், அவர்களின் பாதங்களை தொட்டு வணங்கி நல்ஆசிபெறுகிறோம்.

Default Image
Next News

சாதாரண மனிதர்களின் பாதத்திற்கு இந்த அளவு முக்கியத்துவம் என்றால், கடவுளின் திருப்பாதம் தரிசன வழிபாடு ஜென்ம பாவ விமோசனம். மறுபிறப்பில்லா முக்தியை அளிக்கும் என்பதில் மாற்றுகருத்து இருக்க முடியாது. அந்தவகையில் தனது தந்தை சிவபெருமானுக்கு (இறைவன்) பிரணவ மந்திரத்தை உபதேசம் செய்த, காரணத்தால் முருகப்பெருமானை இறைவனுக்கே இறைவன் தந்தைக்கு பாடம் சொன்ன குருபரன், குமரன் என ஆன்மிக பெரியோர்கள் போற்றி புகழ்ந்து பாடி வழிபடுகின்றனர்.

ஒரு சமயம் கைலாய மலையில் சிவபெருமான் ஞானபழத் திற்காக நடத்திய நாடகத்தின் போது முருகப்பெருமான் கோபித்துகொண்டு மலைமீது ஏறிநின்ற இடம் தான் மூன்றாம் படை வீடு (பழம்+நீ) பழநி என அழைக்கப்படுகிறது. அவ்வாறு முருகப்பெருமான் நின்ற பழநிமலையில் போகர் சித்தரால் நவபாஷன மூலிகையால் வடிவமைக்கப்பட்ட ஞான தண்டாயுதபாணி தெய்வத்தை, நம் நாட்டவர்கள் (இந்தியா) மட்டு மில்லாமல் சிங்கப்பூர், மலேசியா, அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு வெளிநாட்டு பக்தர்களும் அதிகளவில் தரிசனம் செய்கின்றனர். இதன் காரணமாக தமிழகத்தின் அதிகவருமானமுள்ள ஆன்மிக சுற்றுலா ஸ்தலமாக பழநிகோயில் விளங்குகிறது.  சுவாமி திருப்பாத தரிசனம்: கைலாயமலையில் முருகப் பெருமான் ஞானபழத்திற்காக கோவித்துகொண்டு மலையில் மயிலுடன் வந்து நின்ற இடம் ரோப்கார்மேல்தளத்தின் அருகே உள்ளது. அங்கு பக்தர்கள் ஞானதண்டாயுதபாணியின் திருப்பாதம், மயிலையும் ஒருசேர தரிசனம் செய்யமுடியும்.  பழநி முருகனை தரிசிக்க வரும்  பக்தர்கள் முதலில் முருகன் பழநி மலையில் மயிலுடன் வந்து நின்ற இடத்தை தரிசித்து விட்டு பின் முருகனை தரிசித்தால் தான் முழு பலன் கிடைக்கும் என தலபுராணங்கள் கூறுகின்றன. இறைவனுக்கே இறைவன் (பழநியாண்டவர்) திருப்பாதத்தை தரிசனம்செய்தால், ஜென்ம பாவ விமோசனம் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் ஏராளமான பக்தர்கள் சுவாமியின் பாதத்தை வழிபட்டு, பின் நவபாஷன மூர்த்தி ஞானதண்டாயுத சுவாமியை தரிசனம் செய்து வாழ்வில் எல்லா நலனும் பெறுகின்றனர்.

செய்தி: முருகன், படம்: மணிகண்டன், பழநி

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பதி; திருமலை திருப்பதி கோவிலில் வைகுண்ட ஏகாதேசி திருவிழா டிசம்பர் 30 முதல் ஜனவரி 8 வரை 10 நாட்கள் ... மேலும்
 
temple news
காரைக்குடி; காரைக்குடி மீனாட்சிபுரம் முத்துமாரியம்மன் அவதரித்த தினமான இன்று 1008 பால்குடம் எடுத்து ... மேலும்
 
temple news
திருக்கோவிலூர்; திருக்கோவிலூர் அடுத்த முடியனுர் கிராமத்தில் பாழடைந்த அருணாச்சலேஸ்வரர் கோவில் ... மேலும்
 
temple news
சென்னை: ஆந்திர மாநிலம், கடப்பா மாவட்டத்தில் உள்ள நாத நாகேஸ்வரர் கோவிலில், பொத்தப்பி சோழர்களின் ... மேலும்
 
temple news
‘‘பாரத பூமி ஒரு கர்ம பூமி; அளவற்ற ஆன்மிக சக்தியும், செல்வமும் சுரக்கும் தேசம். பொருளாதார ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar